search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைபாடுள்ள குழந்தை"

    • அதிகரித்து விட்ட திருமண வயது தான் இதற்கு காரணம்.
    • வயது ஆக ஆக குரோமோசோம்களின் திறன் குறைந்து விடும்.

    குறைபாடு உள்ள குழந்தை உருவாவது, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. கரு உருவாகும் போதே குறைபாடுகள் இருந்தால், அல்ட்ரா சவுண்டு கருவிகளால், எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது. கருவின் இதயத்தில் உள்ள குறை, கரு உருவான, 13-வது வாரத்திலும், கரு வளர்ச்சியில் ஏதேனும் பெரிய அளவில் குறைபாடு இருந்தால், 18-வது வாரத்திலும் கண்டுபிடிக்க இயலும். நுணுக்கமாக இருக்கும் குறைகளை, 22-வது வாரத்தில், கண்டுபிடித்த விடலாம்.

    குறைபாடுகளுடன் கரு உருவாவதற்கு முக்கிய காரணம், அதிகரித்து விட்ட திருமண வயது. பெண் பிறக்கும் போதே, அவளுடன் இருக்கும் கரு முட்டையின் திறன், வயது ஆக ஆக மாறும். கரு முட்டையில் உள்ள குரோமோசோம்களிலும், இயற்கையிலேயே மாற்றங்கள் ஏற்படும். ஒரு ஆணின் குரோமோசோமும், பெண்ணின் குரோமோசோமும் சேர்ந்து தான், கரு உருவாகிறது.

    வயது ஆக ஆக குரோமோசோம்களின் திறன் குறைந்து விடும். 20 வயதில் இருப்பதைப் போன்ற திறனுடன், 35 வயதில் இருக்காது.

    வயதான குரோமோசோம்கள் கொண்ட கரு, குறைபாடுகளுடன் உருவாகலாம். குறிப்பாக, டவுன் சிண்ட்ரோம் உட்பட, பல மன நல குறைபாடுகள் வரலாம். சில சமயங்களில், 46 குரோமோசோம்களுக்கு பதிலாக, 45 அல்லது 47 என்று சேரும். நிச்சயம் இது குறையுள்ள குழந்தையாகவே பிறக்கும். வாழ்வது இயலாத காரியம் எனும் போது, பல சமயங்களில், இயற்கையே அந்த கருவை அழித்து விடும். கருச்சிதைவிற்கு இதுவும் ஒரு காரணம்.

    அடுத்தது, மரபியல் ரீதியான குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம். மூன்றாவதாக, வயதாகி குழந்தை பெறும் போது, வயது காரணமாக, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பொதுவான உடல் பிரச்சினைகள் வரலாம். கர்ப்பம் தரிக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தில் நீரிழிவு இருந்தால், கருவிலேயே இதய, நரம்பியல் தொடர்பான கோளாறுகள் ஏற்படலாம். அடுத்தது, சுவாசிக்கும் காற்றில் இருந்து, நீர், உணவு என்று அனைத்திலும், தற்போது வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. இவையெல்லாம் கருவின் வளர்ச்சியை பாதிப்பதால், குறையுள்ள கருவாக உருவாக, வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சில வைரஸ் தொற்றுகள், கருவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    நவீன அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில், கருவில் உள்ள நுணுக்கமான குறைகளை கண்டறிவதில், எவ்வளவு துாரம் நன்மை உள்ளதோ, அதே அளவிற்கு சமயங்களில் பிரச்சினையும் உள்ளது. குழந்தைக்கு பாதங்கள் சற்றே வளைந்து இருக்கிறது போன்ற சிறிய குறை இருப்பது தெரிந்தாலும், இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்லி, கருக்கலைப்பு செய்ய வற்புறுத்துபவர்களும் உண்டு.

    சிக்கலான பிரச்சினைகளை கருவிலேயே சரி செய்ய முடியும் போது, சிறிய பிரச்னைகளை எளிதாக சரி செய்து விட முடியும்.

    ×