search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைந்த வைகை அணை நீர் மட்டம்"

    • தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் மட்டம் உயராமலேயே உள்ளது.
    • தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் நெல்சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு போதிய அளவு நீர் மட்டம் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் மட்டம் உயராமலேயே உள்ளது.

    இதனை நம்பியுள்ள விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் நெல்சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர்.

    மேலும் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் அவர்கள் கவலையில் உள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகை அணை நீர் மட்டம் 48.62 அடியாக உள்ளது. 102 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கபப்டுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 119.45 அடியாக உள்ளது. 406 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.85 அடியாக உள்ளது. 57 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. 53 அடியை எட்டியவுடன் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். இருந்த போதும் தற்போது கரையோர மக்கள் பாது காப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர்.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 88.56 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 3.4, மஞ்சளாறு 9.8, சோத்துப்பாறை 1 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது.

    • பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் நீர் வரத்து அதிகரித்ததால் கடந்த 50 நாட்களாக 70 அடிக்கும் மேல் நீடித்து வந்தது.
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக குறைந்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுைர மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. தொடர் மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் 70 அடிக்கு மேல் உயர்ந்தது.

    அதன் பிறகு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் நீர் வரத்து அதிகரித்ததால் கடந்த 50 நாட்களாக 70 அடிக்கும் மேல் நீடித்து வந்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து சரிந்தது. இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக குறைந்தது.

    1544 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 2069 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 134.45 அடியாக உள்ளது. மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் 454 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1778 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. 30 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 125.78 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    ×