search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்பத்தில்"

    • பரபரப்பு தகவல்கள்
    • 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி கீழப்பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 46), பெயிண்டர். இவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38).

    இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாபு, ஸ்ரீதேவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். உஷாபார்வதி தரையில் பிணமாக கிடந்தார். 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவியது.

    இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொண்ட பாபு கடந்த திங்கள்கிழமை தான் வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பணத்தை கொடுத்து உள்ளார்.

    அதன் பிறகு கடந்த 2 நாட்களாக வீட்டில் எந்த நடமாட்டமும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே திங்கள்கிழமையே இவர்கள் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறா ர்கள். பிணமாக கிடந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. 3 பேர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட 3 பேருக்கும் திருமணமாகாத நிலையில் உஷா பார்வதி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கடன் பிரச்சினை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பலியான 3 பேரின் பெற்றோரும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவர்களது உடலை ஒப்படைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. உற வினர்கள் யாரும் வாரதால 3 பேரின் உடலை ஒப்படைப்பது குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.

    • தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.
    • மயில், மான், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் கொங்கு மண்டல விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. மாநிலத் தலைவர் வேணு கோபால் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் உதயகுமார் மற்றும் மாநில அமைப்பாளர் ராம்தாஸ் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    முன்னதாக வட்டாரத் தலைவர் சுப்பு வரவேற்றார்.

    கூட்டத்தில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள். முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளியங்கிரி, தும்பூர் போஜான் மாவட்ட சிறு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் கிட்டப்பா ரெட்டி, தமிழக நதிகள் இணைப்பு விவசாயி சங்க துணை தலைவர் பழனி ச்சாமி, தாசில்தார் (ஓய்வு) அன்னூர் கோபால்சாமி, சண்முகம், கட்சி சார்பற்ற விவசாய சங்க தலைவர் நடராஜன், புளியம்பட்டி ஆசிரியை ஆனந்தி, துரை சாமி மற்றும் அனைத்து தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.

    இக்கூட்டத்தில் மயில், மான், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு முற்று ப்புள்ளி வைக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கும் வன விலங்குகள் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தினை பயன்படுத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது.

    மேலும் மயில் மற்றும் வனவிலங்குகள் எண்ணி க்கை பெருகி விட்டது. இதனால் விவசாயிகளுக்கு பயிர் சேதம் மட்டுமல்லாமல் உயிர் சேதமும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். இதே போல் யானை, காட்டுப்பன்றி, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்கிட வேண்டும்.

    பயிர் சேதம் ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்து விளை விக்கும் வன விலங்குகளால் ஏற்படும் உயிர் சேதத்துக்கும் மற்றும் விளை நிலங்களில் பறவைகள் விலங்குகள் இறந்து கிடந்தாலோ விவசாயிகள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கக் கூடாது.

    மேலும் இது குறித்து விவசாயிகள் மீது நட வடிக்கை எடுத்தால் விவ சாயிகளை ஒன்று திரண்டு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்து விவசாயிகள் காப்பாற்றி பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் அரசியல் கட்சிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் ஆதரவு தரப்படும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    முடிவில் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

    ×