search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்பத்தினர் மறுப்பு"

    தூத்துக்குடியில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கிய அரசு நிவாரண தொகையை வாங்க பலியானோர் குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் போராட்டம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையை சேர்ந்த தொழிலாளி தமிழரசனும் (வயது 45) ஒருவர் ஆவார். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் அதிகாரிகள் குறுக்குச்சாலையில் உள்ள தமிழரசன் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த குடும்பத்தினரிடம், உங்களது குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண தொகை வந்துள்ளது. மேலும் உங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    நிவாரண தொகையை தாசில்தார் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். ஆனால் தமிழரசன் குடும்பத்தினர், அரசு அறிவித்த நிவாரண தொகை எங்களுக்கு வேண்டாம். அதை நாங்கள் வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு இருந்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து தமிழரசன் குடும்பத்தினர் கூறுகையில், எங்களுக்கு அரசு நிவாரண உதவி உள்பட எந்த ஒரு உதவியும் தேவையில்லை. அதற்கு பதிலாக ஸ்டெர்லைட் ஆலையை மூடினாலே போதும். அதுவே அரசு எங்களுக்கு செய்யும் பெரும் உதவி என்றனர்.

    இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், தமிழரசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிவாரண உதவியாக ரூ.3 லட்சத்தை வழங்கினார். ஆனால் அதனையும் அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர்.

    வருமான வரித்துறையின் புகார் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ப.சிதம்பரம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். #PChidambaram #IncomeTax
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் சொத்துக்கள் வாங்கியதாகவும், அதை தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறை புகார் கூறியது.

    இங்கிலாந்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், வாங்கப்பட்டதாக அதற்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது. இதை எதிர்த்து 3 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்தும் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கருப்பு பண தடுப்புச் சட்டத்தின்கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக புகார் மனுவை சென்னை சிறப்பு கோர்ட்டில் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது.



    வருமான வரித்துறையின் புகாருக்கு ப.சிதம்பரம் குடும்பத்தினர் சார்பில் ஆடிட்டர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை கூறியுள்ள புகார் தவறு. ப.சிதம்பரம் குடும்பத்தினர் சொத்துக்கள் எதையும் மறைக்கவில்லை. வருமான வரித்துறையின் புகார் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். #PChidambaram #IncomeTax

    ×