search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசுத்தலைவர்"

    • மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
    • தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே.

    மதுரை:

    தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று பதில் அளித்துள்ள அனுப்பிய கடிதத்தை வெங்கடேன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    டுவிட்டரில் வெங்கடேசன் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

    "உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக" குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பதிலளித்துள்ளார்.

    அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே.

    இவ்வாறு எம்.பி. வெங்கடேசன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

    • மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பில்லை.
    • குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்த பிறகே எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம்.

    குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து மம்தா பானர்ஜி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை என தெரிகிறது.

    குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்த பிறகே எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளனர்.


    ×