search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் தேக்க தொட்டி"

    • பேரூராட்சி தலைவர் யுவராஜ் பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து, அவர்களுடன் நீர்தேக்த தொட்டிக்குள் இறங்கினார்.
    • தலைவரே களம் இறங்கி தூய்மை செய்யும் இந்த செயலை வெகுவாக பாராட்டினார்கள்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட காக்கைக்குன்று குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்படும், குடிநீரில் பாசிகள் கலந்து வருவதாக அப்பகுதி மக்களிடம் இருந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து உடனடியாக பேரூராட்சி தலைவர் யுவராஜ் பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து, அவர்களுடன் நீர்தேக்த தொட்டிக்குள் இறங்கினார்.

    பின்னர் அங்கு படிந்திருந்த சுவர் பாசிகளை அகற்றி, பிளிச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்யும் தூய்மை பணியிலும் ஈடுபட்டார். இதை பார்த்த வார்டு உறுப்பினர்கள் மற்றும் பகுதி மக்கள், தலைவரே களம் இறங்கி தூய்மை செய்யும் இந்த செயலை வெகுவாக பாராட்டினார்கள்.

    • சீரமைத்துதர கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • 100 இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகின்றது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம், அன்னூர் வட்டம் அடுத்துள்ள காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டம்பட்டியில் மேல் குடிநீர் தேக்க தொட்டி 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டியானது 30 ஆயிரம் லிட்டர் நீர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டி ஆகும்.

    தற்போது 4 தூண்களும் மிகவும் மோசமான நிலையில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அருகில் சென்று தண்ணீர் பிடிக்க அச்சப்படுகின்றனர். அண்ணாநகரில் வசிக்கும் சுமார் 250 குடும்பங்களுக்கு இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தான் 100 இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகின்றது.

    கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் தேக்க தொட்டி இதே நிலைமையில் இருப்பதினால் ஊர் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமப்புற கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் மூலமாக 2014 -15 ஆம் ஆண்டு ரூ.72ஆயிரம் மதிப்பீட்டில் பழுதுபார்க்கப்பட்டது. பழுது பார்க்கப்பட்டு 7 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் 4 தூண்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர், நீர்நிலை அதிகாரிகளிடம் பல முறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. மேலும் கடந்த கிராம சபை கூட்டத்தில் இதன் நிலைமையை ஊர் பொதுமக்கள் தெரிவித்தும் காலம் தாழ்த்தி வருகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் இதனை மீண்டும் சீரமைத்து தரும்படி என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • எல்லப்பாளையத்தில் சுமார் 700 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
    • குடிநீர் தேக்க தொட்டியானது விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கரியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லப்பாளையத்தில் சுமார் 700 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு தேவையான குடிநீரானது தேக்க தொட்டியில் இருந்து வீட்டில் உள்ள குழாய்களுக்கு குடிநீர் வழங்கப்படுகின்றது.

    ஆனால் இந்த குடிநீர் தேக்க தொட்டியானது விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. கிராமப்புற கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் திட்டத்தின் மூலம் 2014 முதல் 2015 வரை மதிப்பீட்டுத் தொகை ரூ.76 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பழுதுபார்ப்பு செய்யப்பட்டுள்ளது. இருந்தும் மேல் குடிநீர் தேக்க தொட்டியின் வெளிச்சுவர் மற்றும் அடிச்சுவர்களில் விரிசல் ஏற்பட்டு ஆங்காங்கே கம்பிகள் தெரிகின்றது.உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் இதனை மீண்டும் சீரமைத்து தடையில்லாமல் குடிநீர் வழங்குமாறு என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    ×