என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடிக்க பணம் கேட்டு தொந்தரவு"
கவுண்டம்பாளையம்:
கோவை கணுவாய் சோமையனூர் தெற்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுமதி (வயது 40). இவர் தடாகம் அரசு பள்ளியில் சத்துணவு சமையலராக உள்ளார்.
முருகேசனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு சுமதியை தொந்தரவு செய்தார். தொல்லை தாங்க முடியாமல் சுமதி அவ்வப்போது பணம் கொடுத்து வந்தார்.
நேற்றும் வழக்கம்போல் குடிக்க பணம் கேட்டு சுமதியை தொந்தரவு செய்தார். தன்னிடம் பணம் இல்லை என்று அவர் கூறினார். இருந்தாலும் தொடர்ந்து முருகேசன் தொந்தரவு செய்தார்.
இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்றனர். வேலை முடிந்து வந்த சுமதி அயர்ந்து தூங்கினார். ஆனால் முருகேசன் குடிக்க பணம் கேட்டு சத்தம்போட்டார்.
இதில் ஆத்திரமடைந்த சுமதி அங்கிருந்த மண்எண்ணை கேனை எடுத்து படுத்திருந்த கணவர் மீது ஊற்றினார். மனைவி தன் மீது மண்எண்ணையை ஊற்றியதை அறிந்த கணவர் தன்னை தீ வைத்து கொன்றுவிடும்படி கூறினார். சற்றும் தயங்காத சுமதி அவர் மீது தீ வைத்தார். தீ முருகேன் மீது பற்றி எரிந்தது. வேதனை தாங்க முடியாமல் அவர் அலறி சத்தம்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முருகேசன் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்