search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கணவரை உயிரோடு தீ வைத்து எரித்த மனைவி
    X

    குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கணவரை உயிரோடு தீ வைத்து எரித்த மனைவி

    குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கணவரை உயிரோடு தீ வைத்து எரித்த மனைவி செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் சோமையனூர் தெற்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுமதி (வயது 40). இவர் தடாகம் அரசு பள்ளியில் சத்துணவு சமையலராக உள்ளார்.

    முருகேசனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு சுமதியை தொந்தரவு செய்தார். தொல்லை தாங்க முடியாமல் சுமதி அவ்வப்போது பணம் கொடுத்து வந்தார்.

    நேற்றும் வழக்கம்போல் குடிக்க பணம் கேட்டு சுமதியை தொந்தரவு செய்தார். தன்னிடம் பணம் இல்லை என்று அவர் கூறினார். இருந்தாலும் தொடர்ந்து முருகேசன் தொந்தரவு செய்தார்.

    இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்றனர். வேலை முடிந்து வந்த சுமதி அயர்ந்து தூங்கினார். ஆனால் முருகேசன் குடிக்க பணம் கேட்டு சத்தம்போட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த சுமதி அங்கிருந்த மண்எண்ணை கேனை எடுத்து படுத்திருந்த கணவர் மீது ஊற்றினார். மனைவி தன் மீது மண்எண்ணையை ஊற்றியதை அறிந்த கணவர் தன்னை தீ வைத்து கொன்றுவிடும்படி கூறினார். சற்றும் தயங்காத சுமதி அவர் மீது தீ வைத்தார். தீ முருகேன் மீது பற்றி எரிந்தது. வேதனை தாங்க முடியாமல் அவர் அலறி சத்தம்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முருகேசன் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×