search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிண்ணித்தேர்"

    • கும்ப கலசம் மூன்று நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    • தேரின் கலசம் தங்க முலாம் பூசியது.

    ஆண்டு தோறும் பிரம்மோற்சவத்தின்போது 7-ம் நாளன்று காலையில் ரதோற்சவம் பூந்தேராகவும் 9-ம் நாள் இரவில் கிண்ணித் தேர் என்னும் அற்புத ஸ்ரீ சக்ர ரதம், வெண்கலக் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்டு, அருள்மிகு காளிகாம்பாள் பவனி வருவது கண்கொள்ளக் காட்சியாக இருந்து வந்தது என்று ஆங்கிலேயே வரலாற்று ஆசிரியர் எச்.டி.லவ் என்பவர் தனது சென்னை நகர வரலாறு என்னும் நூலில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    15-ம் நூற்றாண்டுகளுக்கு மன்பெ ஸ்தாபிதமான இத்தொன்மை வாய்ந்த விஸ்வகர்ம சமூகத்தினரின் திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் பிரம்ம உற்சவம் நடைபெறும்போது பூந்தேரிலும் இரவில் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சக்ர ரதத்தில் பவனி செல்லும் ரதமானது காலத்தால் பழுதுபட்டு 1940-க்கு பிறகு தடைப்பட்டு விட்டது. சான்றோர்களின் முயற்சியால் புதிய ரதம் ஒன்று செய்யப்பட்டு ஸ்ரீ பிரபவ வருடம் வைகாசி மாதம் முதல் ஸ்ரீ அம்பாள் பவனி வருகிறாள்.

    1. தொன்மையாக இருந்த ரதத்தின் உயரம் 33 அடி, அகலம் 12 அடி. புதிதாக செய்யப்பட்ட தேரின் உயரம் 22 அடி, அகலம் 10 அடி, 4 சக்கரங்கள் கொண்டது.

    2. கும்ப கலசம் மற்றும் மூன்று நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தேரின் கலசம் தங்க முலாம் பூசியது. பழைய தேரினுடையது. குடை வெள்ளியினால் ஆனது.

    3. குண்டலி ஸ்தானம், நாடி, இருதய ஸ்தானம், கண்ட ஸ்தானம், கும்ப பீடம், ஸ்ரீ அம்பாள் பீடம், மூன்றடுக்கு விமான நிலைகள் யாவும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ளது. 201-766 கன அடி தேக்கு உபயோகப்படுத்தப்பட்டள்ளது. அதன் கிரயம் 1,04,794.85 ஆகின்றது.

    4. தேர் சக்கரங்களுக்கும் இருசு அச்சு மரங்களுக்கும் வாகை மரம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. கிரயம் ரூ.13,745.55.

    5. தேரின் இரும்பு இருசுகளின் நீளம் 10 அடி, கனம் 5 அங்கும்.

    6. தேர் மையங்கள் 40 செம்மரத்தாலும் மேல் நிலைகள் தேக்கு மரச்சட்டங்களால் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 150 கன அடி மரம் அடங்கியுள்ளது.

    7. இருசுகள், இரும்பு தளவாடங்கள், புஷ்கள், இரும்பு பட்டைகள், போல்ட் ஆணிகள் முதலானவைக்கு விலை மதிப்பு ரூ.27,075.80.

    8. தேரில் ஸ்ரீ அம்பாள் மற்ற தெய்வங்களின் அவதார திரு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூலி வகைக்கு ரூ. 70 ஆயிரம்.

    9. வெண்கல கிண்ணிகள் பழைய தேரினுடையது. நல்ல நிலையிலுள்ளது. 800 கிண்ணிகள்தான் புதிய தேரில் பொருத்தப்பட்டுள்ளது.

    இத்தேரினை அமைக்க 1985-ல் அறநிலையத் துறை மதிப்பீட்டின் அங்கீகாரம் ரூ.1 லட்சத்து70 ஆயிரம். ஆனால் தற்போதுள்ள அகவிலையினால் உபகரணங்கள் இரும்பு, மரம் உயர்வினாலும் இதன் மதிப்பீடு ரு.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்தேரினை காலம் சென்ற திருவண்ணாமலை ஸ்தபதியார் டி.சண்முகாச்சாரியாரால் எஸ்டிமேட்டுகள் வரைபடங்கள் அமைக்கப்பட்டு பிறகு சுவாமிமலை ஸ்தபதிகள் பிரம்மஸ்ரீ நடராஜ ஸ்தபதி பிரம்மஸ்ரீ கே.வேலு ஸ்தபதியின் சீறிய முயற்சியால் நல்ல முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    • தேவியின் ஸ்ரீசக்கரத்தை குறிப்பதே வெண்கல கிண்ணித்தேர்.
    • அம்பாள் கிண்ணித்தேரில் வீதியுலா

    தேர், திருவீதி உலா வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கிண்ணித் தேரின் பவனியைப் பார்த்திருக்கிறோமா? இந்தியாவிலேயே வேறெங்குமில்லாத புகழ் பெற்ற கிண்ணித் தேரினை அருள்மிகு ஸ்ரீகாளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோவிலில்தான் காண முடியும். எதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதைப் போல இந்தக் கிண்ணித் தேருக்கும் வரலாறு உண்டு.

    சென்னம்மன் குப்பம், மதராசி குப்பம், ஆறு குப்பம், மேல்பட்டு என்னும் பகுதிகளே இன்றுள்ள சென்னப்பட்டினம் ஆகும். சென்ன - அழகிய அம்மாள் - தாய். இச்சென்னம்மனே இன்றுள்ள காளிகாம்பாளது முதற் பெயர். இவளது பெயரால் முன்னைய சென்னை ராஜ்யமும் தலைநகரும் உண்டாயின.

    எச்.டி.லோவ் எழுதிய மதராஸ் வரலாற்றில் சென்னம்மன் கோவில் மூலவரை கல்யாணி என்றும் கவுரிம்மன் என்றும் பக்தர்கள் அழைத்தனர் என்று குறிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிகப்பழைய கோவில் காளிகாம்பாள் கோவிலே என்றும் காலம் காண முடியவில்லை. காலங்கடந்தது என்றும் சரித்திர ஆசிரியர் கூறுவர். கி.பி. 1640-ல் காளத்தீஸ்வரர் கோவிலும் கி.பி. 1725-ல் கச்சாலீஸ்வரர் கோவிலும் கட்டப்பட்டன.

    400 ஆண்டுகளுக்கு முன்பெ சீரும் சிறப்புமுற்று ஸ்ரீ காளிகாம்பாள் கோவிலில் நடந்த பெருவிழாவில் வெண்கலக் கிண்ணித் தேர் ஓடிற்று. அயல் நாட்டினரும் இத்தேரின் ஓசை கேட்டு மயங்கினர். 24-9-1641ல் சென்னை ஆட்சி ஆங்கில ஏஜென்சியிடமிருந்த போது வலக்கை இடக்கை ஜாதியினர் ஊர்வலம் வரும் விதிகளுக்காகப் பூசலிட்டனர். கி.பி. 1643 கிரீன் ஹில்ஸ் சமாதானம் செய்தார். உடன் பாட்டால் கிண்ணித் தேர் ஓடியது. தேவியின் ஸ்ரீசக்கரத்தைக் குறிப்பதே வெண்கலக் கிண்ணித்தேர் ஆகும்.

    கி.பி. 1655 வலக்கையர் இடக்கையர் அறியாமையால் சண்டையிட்டனர். ஆங்கிலேயர் இந்த இரு திறத்தாரையும் கூட்டிக்கொண்டு போய் காஞ்சி காமகோட்டத்தில் காமாட்சியின் வலப்பக்கத்தில் வலக்கை ஜாதியினரையும் இடப்பக்கத்தில் இடக்கை ஜாதியினரையும் நிற்க வைத்து ஊர்வலத்தில் சண்டையிடக்கூடாது என உடன்படிக்கையில் கையெழுத்திடச் செய்தனர். ஸ்ரீ காஞ்சி காமாட்சியின் பெரில் ஜாதியினர் சத்தியம் செய்தனர். மறுபடியும் கிண்ணித் தேர் மராட்டியர் டவுனில் (முத்தியாலுப்பெட்டை, பகடாலுப்பெட்டை) உலா வந்தது.

    கிண்ணித் தேர் விழா, முதல் கவனர் பிட் நிறுத்தினார் சென்னை இரண்டாம் கவர்னர் சாண்டர்ஸ் காளிகாம்பாள் கோவிலுக்கு விஜயம் செய்து 21-9-1790ல் தாமும் தேரின் வடத்தைக் கையால் பற்றி இழுத்து பக்தர்களோடு பரசவப்பட்டார். அம்பாள் கிண்ணித்தேரில் வீதியுலா கண்கொள்ளாக் காட்சியாகும். அடியேனும் சிறு வயதில் கண்டும் கேட்டும் களித்துள்ளேன். வெண்கலத் தட்டுகளின் ஓசையும் ஒலியும் பக்தர்களை மெய்மறக்கச் செய்யும் என்பது உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை.

    இந்தியாவில் மிகப்பெரிய வெண்கலக் கிண்ணித் தேர் சென்னைபுரி ஸ்ரீகாளிகாம்பாள் கோவிலில் உள்ளதே, கடலூரிலும் பாண்டியன் சேரியிலும் (புதுச்சேரி) கிண்ணித் தேர்கள் உள்ளது. இத்தேரினை ஸ்ரீ சக்கர ரதம் என்பர் பெரியோர். கி.பி. பதினோறாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தனி அம்மன் கோவில்கள் உண்டாயின.

    பின்னரே சாமி, அம்மன் கோவில்கள் சிவசக்தி தத்துவம் கண்டன. காமேஸ்வரர் அல்லது கமடேஸ்வர் (சிவன்) பிரகாசத்தை காமேஸ்வரி, சிவகாமி, காமகோடி, வனிதா, திரிபுரசுந்தரி விமர்ஸா இவை இரண்டினையும் சேர்த்தே ஸ்ரீசக்கரம் தோன்றியது. ஸ்ரீசக்கரம் இரு வகை முக்கோணங்களையுடையது.

    ஒரு வகை ஆண்பால் (சிவன்) குறிக்கும் நான்கு முக்கோணங்களாம். மற்றொரு வகை பெண்பால் குறிக்கும் ஐந்து முக்கோணங்களாம். இவைகளின் உச்சியே பிந்து ஸ்தானம் எனப்படும். அந்த நடுவண் வீற்றிருப்பவர்களே என்றும் பிரியாத காமேஸ்வரர் வனிதா எனப்படுவோர். இத்தகைய ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் முக்கிய சக்தி ஆலயங்களில் ஸ்தாபித்தார். காஞ்சி காமாட்சி முன்னர், குற்றாலத்தில் ஸ்ரீ சங்கர பீடம் ஆவுடையார் கோவில் மூலத்தில், சென்னை காளிகாம்பாள் கோவில் காளியம்மன் முன்னர் இன்றும் அவைகளைக் காணலாம்.

    • ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தில் இந்தத் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
    • சமுதாயம் ஒற்றுமையுடன் செயல்படவும், ஒற்றுமை நிலவவும் ஆலயங்களில் திருத்தேர் விழா

    ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது, ஏழாம் நாளன்று காலையில் ரதோற்சவம் பூந்தேராகவும் ஒன்பதாம் நாள் இரவில் `கிண்ணித் தேர்' என்னும் அற்புத ஸ்ரீசக்ர ரதம், வெண்கலக் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்டு, அருள்மிகு காளிகாம்பாள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்து வந்தது' என்று ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் எச்.டி.லவ் என்பவர் தமது `சென்னை நகர வரலாறு' என்னும் நூலில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த அற்புதக் கிண்ணித் தேர் காலத்தால் பழுதுபட்டு விட்டதால், சுமார் 22 அடி உயரத்தில் புதிதாக ஒரு நூதனக் கிண்ணித் தேர் செய்து முடிக்கப்பட்டு 24.5.1987 அன்று கரிக்கோலம் வெள்ளோட்ட விழாவும், பிரம்மோற்சவம் 7-ம் நாள் 7.6.1987 அன்று காலை பூந்தேராகவும், 9-ம் நாள் 9.6.1987 அன்று இரவு கிண்ணித் தேராகவும் ஸ்ரீஅம்பாள் கொலுவீற்று திருவீதி உலா வருவதைப் பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தில் இந்தத் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதைப் பக்தர்கள் வந்து நேரில் பார்த்தால்தான், அதன் மகிமையை உணர முடியும்.

    இத்தேரினை காலம் சென்ற திருவண்ணாமலை ஸ்தபதி சண்முகாச்சாரியாரால் மதிப்பீடு வரைப்படங்கள் அமைக்கப்பட்டு, பிறகு சுவாமிமலை ஸ்தபதிகள் பிரம்மஸ்ரீ நடராஜ ஸ்தபதி, பிரம்மஸ்ரீ கே.வேலு ஸ்தபதியின் சீரிய முயற்சியால் நல்ல முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    கிண்ணித் தேர் விழாவினை முதல் கவர்னர் பிட் நிறுத்தினார். சென்னை இரண்டாம் கவர்னர் சாண்டர்ஸ் காளிகாம்பாள் கோவிலுக்கு விஜயம் செய்து 21.9.1790-ல் பக்தர்களோடு தாமும் தேரின் வடத்தைக் கையால் பற்றி இழுத்து பரவசப்பட்டார்.

    ஸ்ரீசக்ரத் திருத்தேர்

    தேர் திருவிழாவில் ஓர் சமுதாய தத்துவம் அடங்கியுள்ளது. தேரை இழுக்க ஒருவரால் முடியாது. எனவே, பலருடைய ஒத்துழைப்பும் முழுமையாக தேவை. சும்மா கையை வைத்து இருந்தால் தேர் நகராது.

    பலரும் முழுமையாக செயல்பட்டாலும் பலரும் பலதிசையில் இழுத்தாலும் தேர் நகராது ஒரு முகப்பட்டு ஒரே திசையில் இழுக்க வேண்டும். ஆக அப்படி இழுத்தாலும் ஒரு நொடிப் போழுதில் நிலையை அடைவதில்லை. காலம் தேவைப்படுகின்றது.

    அதுபோலவே, சமுதாயம் ஒற்றுமையுடன் செயல்படவும், ஒற்றுமை நிலவவும் ஆலயங்களில் திருத்தேர் விழா கொண்டாடினர்.

    சென்னைபுரி ஸ்ரீகாளிகாம்பாள் ஸ்ரீசக்ரத்தேர் மிகவும் அழகும் சக்தியும் வாய்ந்த திருத்தேராக காட்சி அளிக்கின்றது.

    பிரம்மோற்சவத்தில் இரவில் ஒலிக்கும் வெண்கல ஓசை `ஓம் ஓம்' என்ற பிரணவ ஓசையை நம் செவியில் இனிய இசையாக ஒலிக்கும் என்பதை நேரில் கண்டவர் கூறுவர்.

    தேரில் முப்பத்து முக்கோடி தேவர்களும், யட்சர்களும் கின்னரர்களும், கந்தருவர்களும் வசிப்பார்கள். உருத்திர கணிகைகளும், ரிஷிகளும் வசிப்பார்கள்.

    இவர்களின் சிற்பகங்கள் தேரின் அடிப்பாகத்தினைச் சுற்றிலும் இருக்கும். மேலும், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் இவர்கள் அதிதேவதைகளாக இருப்பர்.

    தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்குச் சமானம்.

    `விராட் விஸ்வ சொரூபமே எட்டு அடுக்காகும்'

    உச்சியிலிருக்கும் கலசம் சோடசாந்தம். அதற்கடுத்த கீழடுக்கு துவாதசாந்தம். அதற்கு அடுத்த கீழ் அடுக்கு மத்தகஸ்தானம். அடுத்த அடுக்கு புருவ மத்தியஸ்தானம். நடுவில் தாங்கும் குத்துக்கால்கள் முன் மூன்று துளைகள் மூன்று கண்கள் பின்புறம் உள்ளது. சிகையும் இட, வலக்காதுகளும் ஆகும்.

    இறைவன் எழுந்தருளும் கேடய பீடம் முகம். குதிரைகள், சூரிய, சந்திர கலைகள் சாரதி அக்னி கனல் இவை நாசி (மூக்கு) ஆகும். அடுத்த கீழ் அடுக்கு கண்ட ஸ்தானம். அதை அடுத்த கீழ் அடுக்கு இருதய ஸ்தானம். அதற்கடுத்த நாபிஸ்தானம். அதை அடுத்து குண்டலி ஸ்தானம்.

    சக்கரங்கள் தசவாயுக்கள்.

    இறைவி இதற்கு கர்த்தா `தான் ஒருத்தியே' என்று உணர்த்தி இவ்வாறு அமைந்த பிண்ட தத்வ சரீரமாகிய ரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி அசைவற்ற மனதை உந்தி குண்டலினியில் இருந்து நாபிக்கும், நாபியில் இருந்து கண்டத்திற்கும் அதில் இருந்து வாயிக்கும் முறையே ரத குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண்கள் வழியாகவும் நடுவழியாகவும் மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவத்திற்கும் ஏற்றி வயப்பட்டு சும்மாயிருந்தபடி இருக்கும் நித்ய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தைக் காட்டுகிறது.

    மேலும் தேரானது திரிபுராதிகளை சிவன் சிரித்து எரித்து ஆன்மகோடிகளைக் காப்பாற்றிய காத்தல் தொழிலுக்கு அறிகுறியாக உள்ளது. இவ்வளவு தத்துவமுள்ள தேரில் அன்னை ஸ்ரீகாளிகாம்பாள் வருவதை தரிசிப்பது அஷ்டலட்சுமி கடாட்சமும் கோடி புண்ணியங்களும் உண்டு.

    ×