search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கிண்ணித் தேரின் பரிமாணங்கள்-நிர்மாண விவரங்கள்
    X

    கிண்ணித் தேரின் பரிமாணங்கள்-நிர்மாண விவரங்கள்

    • கும்ப கலசம் மூன்று நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    • தேரின் கலசம் தங்க முலாம் பூசியது.

    ஆண்டு தோறும் பிரம்மோற்சவத்தின்போது 7-ம் நாளன்று காலையில் ரதோற்சவம் பூந்தேராகவும் 9-ம் நாள் இரவில் கிண்ணித் தேர் என்னும் அற்புத ஸ்ரீ சக்ர ரதம், வெண்கலக் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்டு, அருள்மிகு காளிகாம்பாள் பவனி வருவது கண்கொள்ளக் காட்சியாக இருந்து வந்தது என்று ஆங்கிலேயே வரலாற்று ஆசிரியர் எச்.டி.லவ் என்பவர் தனது சென்னை நகர வரலாறு என்னும் நூலில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    15-ம் நூற்றாண்டுகளுக்கு மன்பெ ஸ்தாபிதமான இத்தொன்மை வாய்ந்த விஸ்வகர்ம சமூகத்தினரின் திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் பிரம்ம உற்சவம் நடைபெறும்போது பூந்தேரிலும் இரவில் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சக்ர ரதத்தில் பவனி செல்லும் ரதமானது காலத்தால் பழுதுபட்டு 1940-க்கு பிறகு தடைப்பட்டு விட்டது. சான்றோர்களின் முயற்சியால் புதிய ரதம் ஒன்று செய்யப்பட்டு ஸ்ரீ பிரபவ வருடம் வைகாசி மாதம் முதல் ஸ்ரீ அம்பாள் பவனி வருகிறாள்.

    1. தொன்மையாக இருந்த ரதத்தின் உயரம் 33 அடி, அகலம் 12 அடி. புதிதாக செய்யப்பட்ட தேரின் உயரம் 22 அடி, அகலம் 10 அடி, 4 சக்கரங்கள் கொண்டது.

    2. கும்ப கலசம் மற்றும் மூன்று நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தேரின் கலசம் தங்க முலாம் பூசியது. பழைய தேரினுடையது. குடை வெள்ளியினால் ஆனது.

    3. குண்டலி ஸ்தானம், நாடி, இருதய ஸ்தானம், கண்ட ஸ்தானம், கும்ப பீடம், ஸ்ரீ அம்பாள் பீடம், மூன்றடுக்கு விமான நிலைகள் யாவும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ளது. 201-766 கன அடி தேக்கு உபயோகப்படுத்தப்பட்டள்ளது. அதன் கிரயம் 1,04,794.85 ஆகின்றது.

    4. தேர் சக்கரங்களுக்கும் இருசு அச்சு மரங்களுக்கும் வாகை மரம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. கிரயம் ரூ.13,745.55.

    5. தேரின் இரும்பு இருசுகளின் நீளம் 10 அடி, கனம் 5 அங்கும்.

    6. தேர் மையங்கள் 40 செம்மரத்தாலும் மேல் நிலைகள் தேக்கு மரச்சட்டங்களால் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 150 கன அடி மரம் அடங்கியுள்ளது.

    7. இருசுகள், இரும்பு தளவாடங்கள், புஷ்கள், இரும்பு பட்டைகள், போல்ட் ஆணிகள் முதலானவைக்கு விலை மதிப்பு ரூ.27,075.80.

    8. தேரில் ஸ்ரீ அம்பாள் மற்ற தெய்வங்களின் அவதார திரு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூலி வகைக்கு ரூ. 70 ஆயிரம்.

    9. வெண்கல கிண்ணிகள் பழைய தேரினுடையது. நல்ல நிலையிலுள்ளது. 800 கிண்ணிகள்தான் புதிய தேரில் பொருத்தப்பட்டுள்ளது.

    இத்தேரினை அமைக்க 1985-ல் அறநிலையத் துறை மதிப்பீட்டின் அங்கீகாரம் ரூ.1 லட்சத்து70 ஆயிரம். ஆனால் தற்போதுள்ள அகவிலையினால் உபகரணங்கள் இரும்பு, மரம் உயர்வினாலும் இதன் மதிப்பீடு ரு.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்தேரினை காலம் சென்ற திருவண்ணாமலை ஸ்தபதியார் டி.சண்முகாச்சாரியாரால் எஸ்டிமேட்டுகள் வரைபடங்கள் அமைக்கப்பட்டு பிறகு சுவாமிமலை ஸ்தபதிகள் பிரம்மஸ்ரீ நடராஜ ஸ்தபதி பிரம்மஸ்ரீ கே.வேலு ஸ்தபதியின் சீறிய முயற்சியால் நல்ல முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×