search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலாளி படுகாயம்"

    • சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து அதிர்வேட்டு வெடிக்கப்படுகிறது.
    • தற்போது மீண்டும் மக்னா யானை தொழிலாளியை தாக்கியுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் பண்ணைப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 65), இவர் கேரளாவை சேர்ந்த ரவீந்திரநாத் என்பவரது தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தினமும் தோட்ட வேலையை பார்த்து விட்டு, வீட்டுக்கு செல்வார். அப்போது தேவையான உணவு பொருட்களை வாங்கிவிட்டு, மீண்டும் இரவு தோட்டத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு ராமு தோட்டத்திற்கு செல்வதற்காக, பண்ணைப்புரம் சங்கப்பன்குளம் பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்து வந்த ஒற்றை மக்னா யானை ராமுவை பலமாக தாக்கியது. இதில் அவர் பக்கத்தில் உள்ள முள்வேலியில் சிக்கி பலத்த காயமடைந்தார். வேலிக்குள் விழுத்து கிடந்ததால், மக்னா யானை அப்படியே விட்டுவிட்டு சென்றது. உயிர் தப்பிய ராமுவை இன்று அக்கம் பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

    தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து அதிர்வேட்டு வெடிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள யானைகள் இடம்பெயர்ந்து தேனி விளை நிலங்களுக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் மக்னா யானை தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மீண்டும் மக்னா யானை தொழிலாளியை தாக்கியுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிக்கொண்டிருந்தபோது காவலாளி ராணாசிங் துப்பாக்கியை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.
    • துப்பாக்கி தவறுதலாக வெடித்தபோது “டுமீல்” என்கிற பலத்த சத்தம் கேட்டது.

    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் பணி இன்று காலையில் நடைபெற்றது.

    தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டபுள்பேரல் துப்பாக்கியுடன் ராணாசிங் என்ற காவலாளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிக்கொண்டிருந்தபோது காவலாளி ராணாசிங் துப்பாக்கியை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது துப்பாக்கி எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்தது. இதில் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டுகள் ராணா சிங்கின் வயிற்றை துளைத்தன. குண்டு பாய்ந்ததில் அவருக்கு வயிற்றின் இடது பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    துப்பாக்கி தவறுதலாக வெடித்தபோது "டுமீல்" என்கிற பலத்த சத்தம் கேட்டது. இது ஹாரிங்டன் சாலை பகுதியில் ஏ.டி.எம்.மை சுற்றியுள்ள பகுதியில் பயங்கர சத்தத்துடன் எதிரொலித்தது. அப்பகுதியில் இருந்த மக்கள் துப்பாக்கி சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சேத்துப்பட்டு போலீசார் காவலாளி ராணாசிங்கை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×