search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளியம்மன்"

    • காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் ஊமை காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது.

    இந்த விழாவையொட்டி முதல் நாள் இரவு 10 மணிக்கு பெரிய கிணற்றில் இருந்து பூங்கரகம் ஜோடித்து மேளதாளம் முழங்க கோவிலை வந்தடைந்தது. 2-ம் நாள் பொங்கல் வைத்து தீச்சட்டி எடுத்து மாவிளக்கு ஏற்றி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

    3-ம் நாள் முளைப்பாரியோடு ஊர்வலமாக சென்று அம்மன் பூஞ்சோலை அடைந்தது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரிகள் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    4-ம் நாள் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • மதுரை சோழவந்தான் காளியம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது.
    • உச்சிமாகாளியம்மன் 4 ரத வீதிகளில் பவனி வந்து கோவில் முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பூமேட்டுத்தெருவில் உள்ள உச்சிமாகாளியம்மன், வடக்கத்தி காளியம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் நடந்தது.முதல் நாள் கொடியேற்றம், 4-ம் நாள் திருவிளக்குபூஜை, 7-ம்நாள் பூச்சொரிதல் விழா, 8-ம் நாள் வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு சந்தனக்காப்பு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு பா.ஜ.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    இரவு வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல், 9-ம் நாளான இன்று இரவு உச்சிமாகாளியம்மன் சிம்மவாகனத்திலும், ஜெனகை மாரியம்மன் ரிஷபவாகனத்திலும், எழுந்தருளி 4 ரத வீதிகளில் பவனி வந்து வடக்கு காளியம்மன் கோவில் முன்பு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெறும். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

    • வீட்டு மாரியம்மனுக்கு கரகம் எடுத்தல், காளியம்மன் சுவாமிக்கு நீர் மற்றும் பால் குடம் எடுத்தல், சக்தி அழைத்து கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுவாமிகள் குதிரை மீது அமர்ந்து அரூர் பெரிய ஏரியின் கரையில் எழுந்தருளியுள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்துக்கு ஊர்வலமாக சென்றது.

    அரூர்,

    அரூரில் காளியம்மன், சின்ன செல்லியம்மன் மற்றும் பெரிய செல்லியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    அரூரை அடுத்த பிச்சன்கொட்டாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன், சின்ன செல்லியம்மன் மற்றும் பெரிய செல்லியம்மன் கோவில் திருவிழா 11 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, வீட்டு மாரியம்மனுக்கு கரகம் எடுத்தல், காளியம்மன் சுவாமிக்கு நீர் மற்றும் பால் குடம் எடுத்தல், சக்தி அழைத்து கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், வர்ணதீர்த்தம் வர்ணீஸ்வரர் கோவில் இருந்து சுவாமி வீதி உலா சென்று, அரூர் பெரிய ஏரியில் சின்ன செல்லியம்மன் மற்றும் பெரிய செல்லியம்மன் ஆகிய சுவாமிகள் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து, சுவாமிகள் குதிரை மீது அமர்ந்து அரூர் பெரிய ஏரியின் கரையில் எழுந்தருளியுள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்துக்கு ஊர்வலமாக சென்றது.

    இதையடுத்து, ஏரிகரை மீது பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆட்டு கிடா பலியிட்டும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

    இந்த திருவிழாவில், கோவில் தர்மகர்த்தா செல்லன், விழாக்குழுத் தலைவர் மணி, செயலர் பழனி, பொருளர் சுப்பிரமணி, பூசாரி மனோகரன், நிர்வாகிகள் தனபால், பெருமாள், மூர்த்தி உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×