search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால் டிராப்"

    இந்தியாவில் கால் டிராப் பிரச்சனையை சரி செய்ய உதவும் புதிய சிப்செட்டை பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. #5G



    இந்திய டெலிகாம் சந்தையில் கால் டிராப் பிரச்சனையை சரி செய்யும் திறன் கொண்ட இந்தியாவின் முதல் எலெக்டிரானிக் சிப்செட்டை பெங்களூருவை சேர்ந்த சான்க்யா லேப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. கால் டிராப் பிரச்சனை மட்டுமின்றி 5ஜி இணைப்புக்களில் புதிய சிப்செட் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நவீன சாதனங்களில் இதுவரை பயன்படுத்தப்படும் அனைத்துவித மின்னணு சிப்செட்களும் வெளிநாட்டு நிறுவனங்கள் உருவாக்கியவை ஆகும். இந்தியாவில் செமிகன்டக்டர் உற்பத்தி ஆலை இல்லாததே இதற்கு காரணமாக இருக்கிறது. சான்க்யா லேப்ஸ் பயன்படுத்தும் சிப்செட்களும் தென் கொரியாவில் இயங்கி வரும் சாம்சங் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

    புதிய சிப்செட் மொபைல் நெட்வொர்க்கில் இருந்து வீடியோ தரவுகளை பிரிக்கும் என்பதால் அழைப்பு தரம் உயரும் என சான்க்யா லேப்ஸ் நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பராக் நாயக் தெரிவித்தார். 



    சான்க்யாவின் பிரித்வி 3 சிப்செட் மொபைல் போன்களில் நேரடி வீடியோ டிரான்ஸ்மிஷன் வசதியை வழங்குவதோடு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை சாட்டிலைட் போனாக மாற்றும் திறன் கொண்டிருக்கிறது. பிரித்வி 3 சிப்செட் வெளியீட்டு நிகழ்வில் டெலிகாம் துறை மந்திரி மனோஜ் சின்கா கலந்து கொண்டு, புதிய சிப்செட்டை அறிமுகம் செய்தார்.

    புதிய சிப்செட் சார்ந்த மொபைல் போன் உபகரணங்களை டாங்கிள் வடிவிலும் மொபைல் போன்களாகவும் அடுத்த சில ஆண்டுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என நாயக் மேலும் தெரிவித்தார்.  

    செமிகன்டக்டர் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்க சில காலம் ஆகும். உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த சிப்செட்டை அவர்கள் உருவாக்கும் பல்வேறு சாதனங்களில் பயன்படுத்துவர். 5ஜி சேவைகளில் எங்களது தொழில்நுட்பத்தை வழங்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம் என நாயக் தெரிவித்தார்.
    கால் டிராப் விவகாரம் தொடர்பாக டெலிகாம் நிறுவனங்கள் ரூ.56 லட்சம் அபராதம் செலுத்த மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #TRAI



    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் கால் டிராப் பிரச்சனைக்காக டெலிகாம் நிறுவனங்களுக்கு ரூ.56 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட கால் டிராப் அளவுகளை ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்கள் கடந்துவிட்டன.

    அந்த வகையில் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களுக்கு முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம் அபராதமாக செலுத்த டிராய் இரு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலக்கட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.



    இதேபோன்று சேவை தரத்தை மேம்படுத்தாத காரணத்தால் டெலினார் நிறுவனத்திற்கு ரூ.6 லட்சம் அபராதம் செலுத்த டிராய் உத்தரவிட்டுள்ளது. 

    அக்டோபர் 1, 2017 முதல் அமலாக்கப்பட்ட டிராய் விதிமுறை கடுமையாக்கப்பட்டு வருவதன் காரணமாக டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் தரப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கால் டிராப் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. என டெலிகாம் மந்திரி மனோஜ் சின்கா தெரிவித்தார்.

    ஜூலை 2015 முதல் டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் கூடுதாலக 9.74 லட்சம் மொபைல் சைட்களை 2ஜி, 3ஜி, 4ஜி எல்.டி.இ. சைட்களை நிறுவியிருக்கிறது. அந்த வகையில் நவம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் மொபைல் சைட்களின் எண்ணிக்கை 20.07 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.
    ×