என் மலர்
தொழில்நுட்பம்

டெலிகாம் நிறுவனங்களுக்கு ரூ.56 லட்சம் அபராதம் விதித்த டிராய்
கால் டிராப் விவகாரம் தொடர்பாக டெலிகாம் நிறுவனங்கள் ரூ.56 லட்சம் அபராதம் செலுத்த மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #TRAI
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் கால் டிராப் பிரச்சனைக்காக டெலிகாம் நிறுவனங்களுக்கு ரூ.56 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட கால் டிராப் அளவுகளை ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்கள் கடந்துவிட்டன.
அந்த வகையில் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களுக்கு முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம் அபராதமாக செலுத்த டிராய் இரு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வரையிலான காலக்கட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சேவை தரத்தை மேம்படுத்தாத காரணத்தால் டெலினார் நிறுவனத்திற்கு ரூ.6 லட்சம் அபராதம் செலுத்த டிராய் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 1, 2017 முதல் அமலாக்கப்பட்ட டிராய் விதிமுறை கடுமையாக்கப்பட்டு வருவதன் காரணமாக டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் தரப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கால் டிராப் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. என டெலிகாம் மந்திரி மனோஜ் சின்கா தெரிவித்தார்.
ஜூலை 2015 முதல் டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் கூடுதாலக 9.74 லட்சம் மொபைல் சைட்களை 2ஜி, 3ஜி, 4ஜி எல்.டி.இ. சைட்களை நிறுவியிருக்கிறது. அந்த வகையில் நவம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் மொபைல் சைட்களின் எண்ணிக்கை 20.07 லட்சமாக அதிகரித்து இருக்கிறது.
Next Story






