search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலை உணவுத்திட்டம்"

    • முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
    • கலெக்டர் பிரபுசங்கர் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட புதிய கலெக்டராக பிரபு சங்கர் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை கலெக்டர் பிரபு சங்கர் திருவள்ளூர், பஜார் அருகே உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது முதல் அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். மேலும் கலெக்டர் பிரபுசங்கர் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார். மேலும் உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிக்கு கொண்டு செல்லும் முறை மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும் விதம், பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்ளின் வருகை மற்றும் படிப்பு குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, கூடுதல் கலெக்டரும் திட்ட இயக்குனருமான சுகபுத்திரா, நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, சுகாதார அலுவலர் கோவிந்த ராஜு, தலைமை ஆசிரியர்கள் சிவரணி, பூங்கோதை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்றுள்ளது.
    • தினமும் காலை உணவு சாப்பிடுவதால் அவர்களின் கற்றலின் திறன் அதிகரிக்கும்.

    ராமநாதபுரம்

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை வரவேற் றுள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறிய தாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ந்தேதி மதுரை அரசுப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் காலையிலேயே வீட்டிலி் இருந்து புறப்பட்டு விடுவ தால், பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிடுவது இல்லை. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, கிராம புறங்களில் பெரும்பாலான பெற்றோர்கள் அதிகாலை யில் விவசாயம் போன்ற வேலைகளுக்கு செல்வதால், அந்த பெற்றோர்களின் குழந்தைகள் காலையில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வருகின்றனர்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்-அமைச்சரால் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தால் பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் காலை உணவு சாப்பிடுவதால் அவர்களின் கற்றலின் திறன் அதிகரிக்கும்.மேலும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடின்றி இருப்பார்கள்.

    17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் காலை உணவு திட்டத்தை மாநிலத்தலைவர் தியாகராஜன் தலைமையிலான தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம்
    • கலெக்டர் அறிவுரை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டா ரத்துக்குட்பட்ட நல்லூர் அரசு தொடக்கப்பள்ளி, இரவிபுதூர் அரசு தொடக்கப் பள்ளி, வழுக்கம்பாறை அரசு தொடக்கப்பள்ளி, குலசேகரபுரம் அரசு தொடக் கப்பள்ளி, மகாதானபுரம் அரசு தொடக்கப்பள்ளி மையங்களில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல் பாடுகளை செல்போன் செயலியில் மையப் பொறுப்பாளர் பதிவேற்றம் செய்வதை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக மாநகராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது 2-வது கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் இந்நிகழ்வினை தொடங்கி வைக்க உள்ளார்.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதை முன்னிட்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. சமையல் பணி, மாண வர்களுக்கு உணவு வழங்கும் பணி முடிவுற்றதை புகைப் படங்கள் வாயிலாக பதி வேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் முன்னோட்ட நிகழ்வு குமரி மாவட்டம் முழுவதும் உள்ள காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படவுள்ள அனைத்து அரசு பள்ளிகளி லும் நடைபெற்று வருகிறது.

    ஆய்வு நடந்த நல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 69 மாணவ, மாணவிகளும், இரவிபுதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 101 மாணவ, மாணவிகளும், வழுக்கம்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 114 மாணவ, மாணவிகளும், குலசேகர புரம் அரசு தொடக்கப்பள்ளி யில் பயிலும் 97 மாணவ, மாணவிகளும், மகாதானபுரம் அரசு தொடக்கப்பள்ளி யில் பயிலும் 57 மாணவ, மாணவிகளும் பயன்பெற உள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பாபு, மகளிர் திட்ட இயக்குநர் பீபீஜான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கருணாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×