search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திகை தீபம்"

    • ரோஜா மலர்கள் 100 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • டிசம்பர் மாதம் முழுவதும் பனி காலம் என்பதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறையும்.

    மதுரை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபத்திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். இதற்காக மதுரை மார்க்கெட்டுகளில் பூக்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டு உள்ளனர்.

    மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக சந்தையில் வளாகத்தில் இன்று பூக்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

    கார்த்திகை தீப திருநாளையொட்டி மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக 400 முதல் 800 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த மல்லிகை பூக்கள் இன்று கிலோ 1,800 ரூபாயாக விலை உயர்ந்தது. இது தவிர பிச்சி பூக்கள் 800 ரூபாய்க்கும், முல்லை பூக்கள் 900 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. ரோஜா மலர்கள் 100 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், தற்போது பூக்களின் வரத்து குறைவாக காணப்படுவதாலும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அதிக அளவில் பூக்களின் தேவை இருப்பதாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது பனி சீசன் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறைந்துள்ளதால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    வழக்கமாக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு தினமும் 50 டன்களுக்கு மேல் மல்லிகை பூக்கள் வரத்து இருந்த நிலையில் தற்போது அதன் வரத்து 30 டன்னாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் இனி டிசம்பர் மாதம் முழுவதும் பனி காலம் என்பதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறையும். இதன் காரணமாக இதன் விலை ஏற்றம் தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மல்லிகை விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்ற பூக்களை ஆர்வத்துடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைக்கேற்ப பஸ்களை கூடுதலாக இயக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
    • போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் வசதிக்காகவும் ஆங்காங்கே சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கார்த்திகை தீபம் நாளை ஏற்றப்படுகிறது.

    திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி இன்று மற்றும் நாளையும் சென்னையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடைகிறது.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

    அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் விழுப்புரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடைகிறது.

    பின்னர் அந்த ரெயில் 2 நாட்கள் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

    தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் மெமு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இன்று மற்றும் நாளையும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடைகிறது.

    இந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர் பண்ருட்டி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ராணிப்பேட்டை, ஆற்காடு, காஞ்சிபுரம், பெங்களூரு, சிதம்பரம், விருத்தாசலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் வசதிக்காகவும் ஆங்காங்கே சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைக்கேற்ப பஸ்களை கூடுதலாக இயக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    தீப தரிசனம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்து வருகின்றனர்.

    நகரில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன. பக்தர்களின் வசதிக்காக 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதை சுத்தம் செய்யப்பட்டு பளிச்சிடுகிறது.

    பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த நகருக்குள் வரும் 9 சாலைகளிலும் பார்க்கிங் மையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறை சார்பில் கிரிவலப்பாதையில் 85 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து துறை அலுவலர்களும் தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால் எங்கும் அரோகரா கோஷம் என்ற மந்திரங்கள் பக்தர்களிடம் இருந்து வெளிப்படுகிறது. ஆன்மிக நகரம் பக்தி பரவசமாக காட்சி தருகிறது.

    • ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார்.
    • எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும்.

    ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார்.

    திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும், தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது.

    இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது

    இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது.

    பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது.

    கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது.

    நிதி வேண்டாம், கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல

    கருணை நிதி கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம்.

    எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே

    எல்லா வகையிலும் சிறப்பு உண்டாகும்.

    எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள்

    ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும்.

    தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும்.

    அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும்.

    அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

    • அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.
    • வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.

    அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.

    தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி),

    பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது.

    திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி.

    எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.

    கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.

    தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

    இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில்

    சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

    வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.

    எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.

    எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும்,

    கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும்

    எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி,

    அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான,

    வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

    சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும்

    சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

    • பெரும்பாலான பக்தர்களை அவரே ‘வா’ என்று அழைத்து விடுவார்.
    • பக்தர்கள் கிரிவலம் வரும் போது சுற்றியுள்ள லிங்கங்களை தவறாது வழிபட வேண்டும்.

    திருப்பதிக்கும், திருவண்ணாமலைக்கும் லட்சக்கணக்கில் கூட்டம் திரண்டு வரக்காரணம் இரண்டு தெய்வங்களுமே

    அதிசயிக்கத்தக்க வகையில் பக்தர்களுக்கு ஒரு நாள் 'விசேஷ அழைப்பு விடுப்பார்கள்' என்பது தான்!

    திருப்பதிக்கோ, திருவண்ணாமலைக்கோ உடனே புறப்பட்டு சென்று, வரம் வாங்கித் திரும்ப வேண்டும்

    என்று நினைக்கிற எல்லோருக்குமே அந்த பாக்யம் கிடைத்து விடாது

    பெரும்பாலான பக்தர்களை அவரே 'வா' என்று அழைத்து விடுவார்.

    14 கி.மீ கிரிவலப்பாதையை எளிதாக நடக்க வைத்து விடுவார்.

    இந்த முதல் பயணத்திலேயே உங்கள் உள்ளத்தில் புதிய உணர்வுகளை காண்பீர்கள்.

    "இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நினைக்க ஆரம்பிப்பீர்கள்.

    உற்சாகமான பல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

    உங்களையும் அறியாமல் தினமும் 'ஓம் நமச்சிவாயா' என்று உச்சரிக்க தொடங்குவீர்கள்.

    அடுத்து, இரண்டாவது பவுர்ணமிக்கு நம்மால் போக முடியுமா?

    என்ற சிந்தனை உங்கள் சூழ்நிலை நிமித்தமாக தலை தூக்க ஆரம்பிக்கும்.

    ஆனால் என்ன ஆச்சரியம்! மிகச் சரியாக அடுத்த பவுர்ணமி தினத்தன்று நீங்கள் அங்கு இருப்பீர்கள்.

    இது அண்ணாமலையார் நடத்தும் அற்புதம் தான்!

    இந்த இரண்டாவது பயணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்கத் துவங்கும்.

    நீங்கள் எதை நினைத்தீர்களோ அது நிறைவேறும்.

    பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். மனச்சஞ்சலங்களில் இருந்து முற்றிலுமாக விடுபடத் தொடங்கி இருப்பீர்கள்!

    மூன்றாவது பவுர்ணமிக்கு அண்ணாமலையார் சில பக்தர்களை சோதிப்பார்,

    " இவன் தானாக முயற்சி எடுத்து வருகிறானா? பார்ப்போம்' என்று வேடிக்கை பார்ப்பார்.

    மிகுந்த இறை பக்தி கொண்டு பக்தர்கள் இந்த சோதனையை கடக்க வேண்டும்.

    பெரும் முயற்சி எடுத்து செல்ல வேண்டியது இருக்கும்.

    சோதனைகளை கடந்து மூன்றாவது பவுர்ணமிக்கு போய் விட்டு திரும்புபவர்களுக்கு அருணாச்சலேஸ்வரர்

    அருள் மள, மளவென வரிசையாகத் தேடி வரும்.

    இரண்டாண்டு காலமாக மனதுக்குள் அழுது புழுங்கி, புலம்பிக் கொண்டிருந்த விஷயங்கள் மகிழ்ச்சி தரும் படியாக மாறும்.

    சில பக்தர்கள் சோதனையை கடக்க முடியாமல் மூன்றாவது பவுர்ணமியை கோட்டை விட்டு விடுவார்கள்.

    அவர்கள் அண்ணாமலையாரை தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க, நாலாவது பவுர்ணமிக்கு

    அவரே வரும்படி செய்து அருள் பாலித்து விடுவார்.

    பக்தர்கள் கிரிவலம் வரும் போது சுற்றியுள்ள லிங்கங்களை தவறாது வழிபட வேண்டும்.

    அவ்வப்போது மலைப்பகுதியை பார்த்து 'ஓம் நமச்சிவாயா நமஹ' ஓம் அருணாச்சலேஸ்வரா நமஹா'

    என்ற மந்திரத்தை உச்சரித்தபடி செல்ல வேண்டும்.

    முழுமையான பக்தி உணர்வுடன் வலம் வருபவர்களுக்கு நினைத்தது கை கூடும்.

    இதை தொடர்ந்து ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் சென்று வருபவர்கள் மிகவும் யோகம் உடையவர்கள்.

    அவர்களின் வாழ்க்கை அமைதியான நீரோடை போல அமையும்.

    மிகுந்த மனவலிமை பெறுவார்கள். எதையும் எளிதாக வெல்வார்கள்.

    அவர்களது 'சொல்வாக்கு' பலிக்கும் அளவுக்கு உயர்வார்கள்.

    அண்ணாமலையாரை இன்றே நினையுங்கள். நினைத்த காரியம் யாவும் நிறைவேறக் காண்பீர்கள்.

    • வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி.
    • விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும்.

    வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி.

    விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும்.

    அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை.

    எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி,

    தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும்.

    இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

    எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர்.

    நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள்,

    ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

    வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம்.

    இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும்.

    • இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.
    • கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

    பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு.

    அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.

    திரு அண்ணாமலையார் கோவிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது.

    கோவிலுக்கு உள்ளே பேய் கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.

    அடி முடி காணாத பரம்பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட

    கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய

    இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம்.

    அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது.

    கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

    பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன.

    மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது.

    தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம்.

    திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.

    அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர்,

    குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள்,

    இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன்,

    கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி,

    சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

    • பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரக தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்
    • குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால்

    தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம்.

    விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம்

    ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.

    நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி

    பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி,

    சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

    தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு,

    சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம்.

    இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும்

    அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர்.

    கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம்

    கள் உண்டபாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள்

    ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

    கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவவிஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து,

    வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால்,

    குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.

    • மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது.
    • இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது.

    இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.

    அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர்

    உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது.

    அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது.

    இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    • பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுக தீபம் ஏற்றப்படுகிறது.
    • பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

    கார்த்திகை தீப பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில்

    ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள்.

    இந்த ஒற்றை நெய் தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள்.

    அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள்.

    இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

    பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுக தீபம் ஏற்றப்படுகிறது.

    பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

    • கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது.
    • பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

    கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா

    அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது.

    இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும்

    அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.

    சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும்

    அக்னி வடிவமாக காட்சி தந்தார்.

    இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

    அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி,

    அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசை செய்வர்.

    பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.

    இதனை, 'ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்' தத்துவம் என்கிறார்கள்.

    பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

    • பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.
    • உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு.

    இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு

    கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி

    இரவு கோவிலுக்கு சென்று தரிசனம் பெறுவர்.

    மறுநாள் காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர்.

    பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

    வீடுகளை அலங்கரிக்கும் முறை

    பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து

    அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி

    நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

    கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.

    இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது.

    கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும்

    அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை.

    இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் எனப்படுகிறது.

    கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம்.

    கார் என்றும் கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மலரும் காலம் கார்த்திகை மாதம்.

    கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

    ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார்.

    திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும் தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது.

    இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் ஒரு காலத்தில் வெளிப்படும்.

    பிற்காலத்தில் அதையெல்லாம் பார்க்கப் போகிறார்கள்.

    அதனால்தான் அந்த மலையைச் சுற்றினாலேயே அத்தனை இன்பம் கிடைக்கும் என்று சொல்வது.

    அந்த அளவிற்கு மிகப் பழமையான மலை. அதனால்தான் இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார்.

    உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு.

    அதனால் ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது.

    ×