search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரைக்குடி காளை"

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் காரைக்குடி காளைக்கு 146 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ். #TNPL2018 #KKvVKV
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் காரைக்குடி காளை- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

    டாஸ் வென்ற காரைக்குடி காளை பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி காஞ்சி வீரன்ஸ் அணியின் விஷால் வைத்யா, சித்தார்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சித்தார் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். விஷால் 34 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.



    சுப்ரமணிய சிவா 18 ரன்னும், சஞ்சய் யாதவ் 13 பந்தில் 27 ரன்களும், எஸ். அஷ்வத் 14 பந்தில் 17 ரன்ளும், சுனில் சாம் 8 பந்தில் 19 ரன்களும் அடிக்க காஞ்சி வீரன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்துள்ளது.

    பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை பேட்டிங் செய்து வருகிறது.
    டி.என்.பி.எல். போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை-வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #NammaooruNammaGethu
    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும் ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 7 ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்து விட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ் திருச்சி வாரியர்ஸ் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. டூட்டி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் தலா 2 புள்ளியுடன் உள்ளன. காரைக்குடி காளை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் எந்த புள்ளியும் பெறவில்லை.

    டி.என்.பி.எல். போட்டியின் 8-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஐடிரீம் காரைக்குடி காளை-வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணியும் வெற்றி எதுவும் பெறவில்லை. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணி தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. அந்த அணி காஞ்சி வீரன்சை வீழ்த்தி முதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் முதல் ஆட்டத்தில் 48 ரன்னில் தூத்துக்குடி அணியிடம் தோற்றது. எனவே அந்த அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaooruNammaGethu
    திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் லைகா கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. #TNPL2018 #LycaKovaiKings #KaraikudiKaalai
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடைபெற்ற லீக் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை லைகா கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற காரைக்குடி காளை பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் மான் மாப்னா 22 பந்தில் 44 ரன்கள் அடித்தார். அவருக்கு ஆதித்யா ஒத்துழைப்பு தந்தார். அவர் 36 ரன்களில் அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடாததால் காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.



    கோவை கிங்ஸ் சார்பில் பிரசாந்த் ராஜேஷ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். ஷாருக் கான் 32 ரன்களும், அஷ்வின் வெங்கட்ராமன் 34 ரன்களும் எடுத்தனர்.

    மற்றவர்கள் நிலைத்து நிற்காததால் கோவை அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.

    சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய கோவை கிங்ஸ் ஒரு ஓவரில் 1 விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய காரைக்குடி காளை 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கோவை கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் எஸ் பத்ரிநாத் காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். #TNPL #KaraikudiKaalai
    தமிழ்நாடு பிரீமியர் லீக் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு 3-வது சீசனுக்கு தயாராகியுள்ளது. 3-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் காரைக்குடி காளை அணியின் பயிற்சியாளராக எஸ் பத்ரிநாத் செயல்பட இருக்கிறார்.

    பத்ரிநாத் இந்திய அணிக்காகவும், நீண்ட காலம் தமிழ்நாடு அணிக்காகவும் விளையாடியவர். காரைக்குரை காளை அணியின் தலைமை பயிற்சியாளராக தமிழ்நாட்டின் முன்னாள் வீரரான பிசி பிரகாஷ் உள்ளார். அவருக்கு உதவியாளராக செயல்பட இருக்கிறார்.



    பத்ரிநாத் இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் ஒரெயொரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். 145 முதல்தர போட்டிகளில் விளையாடி 32 சதம், 45 அரைசதங்களுடன் 10245 ரன்கள் அடித்துள்ளார்.
    ×