என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி காளை-காஞ்சி வீரன்ஸ் இன்று மோதல்
Byமாலை மலர்19 July 2018 5:46 AM GMT (Updated: 19 July 2018 5:46 AM GMT)
டி.என்.பி.எல். போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை-வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #NammaooruNammaGethu
திண்டுக்கல்:
டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும் ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
இதுவரை 7 ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்து விட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ் திருச்சி வாரியர்ஸ் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. டூட்டி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் தலா 2 புள்ளியுடன் உள்ளன. காரைக்குடி காளை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் எந்த புள்ளியும் பெறவில்லை.
டி.என்.பி.எல். போட்டியின் 8-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஐடிரீம் காரைக்குடி காளை-வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணியும் வெற்றி எதுவும் பெறவில்லை. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணி தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. அந்த அணி காஞ்சி வீரன்சை வீழ்த்தி முதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் முதல் ஆட்டத்தில் 48 ரன்னில் தூத்துக்குடி அணியிடம் தோற்றது. எனவே அந்த அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaooruNammaGethu
டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும் ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
இதுவரை 7 ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்து விட்டன. திண்டுக்கல் டிராகன்ஸ் திருச்சி வாரியர்ஸ் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. டூட்டி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் தலா 2 புள்ளியுடன் உள்ளன. காரைக்குடி காளை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் எந்த புள்ளியும் பெறவில்லை.
டி.என்.பி.எல். போட்டியின் 8-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஐடிரீம் காரைக்குடி காளை-வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணியும் வெற்றி எதுவும் பெறவில்லை. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணி தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. அந்த அணி காஞ்சி வீரன்சை வீழ்த்தி முதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் முதல் ஆட்டத்தில் 48 ரன்னில் தூத்துக்குடி அணியிடம் தோற்றது. எனவே அந்த அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaooruNammaGethu
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X