search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி காளைக்கு 146 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்
    X

    காரைக்குடி காளைக்கு 146 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது காஞ்சி வீரன்ஸ்

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் காரைக்குடி காளைக்கு 146 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ். #TNPL2018 #KKvVKV
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் காரைக்குடி காளை- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

    டாஸ் வென்ற காரைக்குடி காளை பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி காஞ்சி வீரன்ஸ் அணியின் விஷால் வைத்யா, சித்தார்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சித்தார் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். விஷால் 34 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.



    சுப்ரமணிய சிவா 18 ரன்னும், சஞ்சய் யாதவ் 13 பந்தில் 27 ரன்களும், எஸ். அஷ்வத் 14 பந்தில் 17 ரன்ளும், சுனில் சாம் 8 பந்தில் 19 ரன்களும் அடிக்க காஞ்சி வீரன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்துள்ளது.

    பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×