search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரத்தொழுவு சிவன்கோவில்"

    • கல்வெட்டு மற்றும் சுவடிகள் பாதுகாப்புக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், விளக்கமளித்தார்.
    • ஹேனாெஷர்லி, வரலாற்று பேராசிரியர் ராபின் ஆகியோர் உடனிருந்தனர்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் தாலுகா அமராவதி ஆற்றங்கரையில், தொன்மை வாய்ந்த கோவில்கள், கல்வெட்டுகள் உள்ளன.கரைவழி நாடுஎனப்படும் கல்லாபுரம், கொழுமம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு வரலாற்று சின்னங்கள் உள்ளன.கோவில்கள் மற்றும் இதர பகுதிகளிலுள்ள நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள், அரசின் தொல்லியல்துறை மற்றும் வரலாற்று ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வரலாற்று சிறப்பு மிக்க இக்கல்வெட்டுகளை தமிழக தொல்லியல்துறை ஆய்வாளரும் சுவடிகள் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான சசிகலா ஆய்வு செய்தார்.

    குறிப்பாக காரத்தொழுவு சிவன் கோவிலில், கரைவழி நாட்டு காரத்தொழுவு என்ற வாசகம் இருப்பதையும், 12ம் நுாற்றாண்டில், குலோத்துங்கன், வீரராஜேந்திரன் உள்ளிட்ட மன்னர்கள் அமராவதி ஆற்றங்கரையை உள்ளடக்கிய தென்கொங்கு நாட்டு பகுதிகளை ஆட்சி செய்ததை கல்வெட்டு வாசகங்களை கொண்டு உறுதிப்படுத்தினார்.மேலும் இப்பகுதி ராஜராஜ வள நாடு என கல்வெட்டில், பொறிக்கப்பட்டுள்ள தகவலையும் தெரிவித்தார்.கல்வெட்டு மற்றும் சுவடிகள் பாதுகாப்புக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், விளக்கமளித்தார்.

    ஆய்வின் போது உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் முனைவர்கள் விஜயலட்சுமி, ேஹனாெஷர்லி, வரலாற்று பேராசிரியர் ராபின் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×