search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமராஜர் மக்கள் மன்றம்"

    • காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    திருப்பூர் :

    காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைவர் அன்னை எம்.மாதவன் தலைமையில், தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் ஜூலை 15-ந்தேதி காமராஜர் பிறந்த நாள் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, விளையாட்டுப்போட்டி நடத்துதல். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், மாபெரும் அன்னதானம் வழங்குவது,திருப்பூர் மாவட்டம் முழுவதும் பகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் செயலாளர் அலெக்ஸ், பொருளாளர் பழனியப்பன், துணை தலைவர் பிரான்ஸிஸ், துணை செயலாளர் அந்தோணி, இணைசெயலாளர்கள் டி.எம். சுருளிராஜ், ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ரமேஷ்குமார், ஜெயக்குமார், சூர்யா,பரமசிவன், ரத்னா மனோகர், ஈஸ்வரன்,நெல்லை ராஜன், சின்னமணி, சரவணன், மகிஷா , மைக்கேல், ஆத்திசெல்வன், கண்ணன், லாலாகணேசன்,யோகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    • காமராஜரின் 120 வது பிறந்த நாளை காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்படுகிறது.
    • மங்களம் அரசு பள்ளிக்கு தேவையான உபகரண பொருட்கள் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    காமராஜர் மக்கள் மன்ற தலைவர் எம்.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதேபோல் இந்த ஆண்டும் காமராஜரின் 120 வது பிறந்த நாளை வருகிற 15ந்தேதி காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் ஜாதி மதம் கடந்து காமராஜர் வழியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படிதிருப்பூர் குமரன் காலேஜ் அருகில் பெரியாண்டிபாளையம்மங்கலம் மெயின் ரோட்டில் வருகிற 15-ந்தேதி காலை 7 மணிக்குகாமராஜர் மக்கள் மன்றம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. காலை8 மணிக்கு அனுப்பர்பாளையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்படுகிறது.

    தொடர்ந்து ஏழை- எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், மங்களம் அரசு பள்ளிக்கு தேவையான உபகரண பொருட்கள் வழங்கப்படுகிறது.தொடர்ந்துபகல் 11.30 மணிக்கு காமராஜர் மக்கள் மன்றத்தின் சார்பில்எஸ்.எஸ்.டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பித்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவர் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை காமராஜர்மக்கள் மன்ற தலைவர் எம்.மாதவன் தலைமையில் செயலாளர் எம்.அலெக்ஸ்,பொருளாளர் எல்.ஐ.சி. கே.பழனியப்பன், துணைத்தலைவர்ஏ.பிரான்சிஸ், துணை செயலாளர் ஜே.அந்தோணி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    ×