search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்திலால் பூரியா"

    • பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
    • காந்திலால் பூரியாவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்.

    மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக காந்திலால் பூரியா போட்டியிடுகிறார்.

    இவர் அங்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். ஒவ்வொரு பெண்கள் வங்கி கணக்கிலும் இந்த பணம் நேரடியாக வரவு வைக்கப்படும். இது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    2 மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

    இந்த பேச்சுக்கு தொண்டர்கள் மத்தியில் பலத்த கரகோஷமும் எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் திக் விஜய் சிங், மற்றும் ஜிது பட்வாரி முன்னிலையில் காந்திலால் பூரியா இந்த கருத்தை தெரிவித்தார்.

    இதனை ஆதரிப்பது போல மாநில தலைவர் ஜிது பட்வாரி பேசும் போது இரண்டு மனைவிகள் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக காந்திலால் பூரியா கூறியது ஒரு அற்புதமான அறிவிப்பு என கூறினார்.

    இந்நிலையில், காந்திலால் பூரியாவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாஜா எம்.பி. மாயா நரோலியா கூறும்போது, "காங்கிரஸ் தலைவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

    காந்திலால் பூரியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுக்க இருக்கிறோம். அவரின் இந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

    இதற்கு பாராளுமன்ற தேர்தலில்பெண் வாக்காளர்கள் காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.

    ×