என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காந்தம்
நீங்கள் தேடியது "காந்தம்"
கர்நாடக மாநிலம் மங்களூரில் காந்தத்தை விழுங்கிய சிறுமிக்கு காந்தம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்களின் இந்த முயற்சிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
மங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிய போது பொம்மையில் இருந்த காந்தத்தை விழுங்கி விட்டாள். இதனால் அவளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
எனவே உயிருக்கு ஆபத்தான நிலையில் அவளை மங்களூரில் உள்ள கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைகள் நல டாக்டர் ஜெயதீர்த்தா ஜோஷி ‘எக்ஸ்ரே’ எடுத்து பார்த்த போது குழந்தையின் வலது நுரையீரல் பகுதியில் மூச்சு குழாயில் அந்த காந்தம் சிக்கி இருப்பது தெரிய வந்தது.
எனவே அதை வெளியே எடுப்பது குறித்து டாக்டர்கள் குழு ஆலோசனை நடத்தியது. விழுங்கப்பட்ட காந்தத்தால் சிறுமியின் மூச்சு குழாயில் காயம் மற்றும் ரத்தக்கசிவு உள்ளதா? என்பதை கண்டறிய ‘பிரோன் ஜோஸ் கோப்’ கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டது.
‘எண்டோஸ்கோப்பி’ கருவி மூலம் காந்தத்தை வெளியே எடுக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என கருதி அம்முடிவு கைவிடப்பட்டது. இது போன்று பல ஆலோசனைகள் பெறப்பட்டது.
முடிவில் மயக்க மருந்து கொடுத்து சக்தி வாய்ந்த மற்றொரு காந்தம் மூலம் விழுங்கிய காந்தத்தை வெளியே எடுக்க தீர்மானிக்கப்பட்டது. மயக்க மருந்து நிபுணர் டாக்டர்களிடம் இந்த ஆலோசனையை வழங்கினார்.
இறுதியில் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. பின்னர் மயக்க நிலையில் வைத்து மற்றொரு சக்தி வாய்ந்த காந்தத்தை மூச்சு குழாய்க்குள் செலுத்தி விழுங்கப்பட்ட காந்தம் வெளியே எடுக்கப்பட்டது. அதையடுத்து சிறுமி சகஜ நிலைக்கு வந்து உயிர் பிழைத்தாள். சிகிச்சை முடிந்து மறுநாள் அவள் வீடு திரும்பினாள்.
டாக்டர்களின் இந்த முயற்சிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். சிறுமியின் பெற்றோர் நன்றி கூறினர். #Magnet
கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிய போது பொம்மையில் இருந்த காந்தத்தை விழுங்கி விட்டாள். இதனால் அவளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
எனவே உயிருக்கு ஆபத்தான நிலையில் அவளை மங்களூரில் உள்ள கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைகள் நல டாக்டர் ஜெயதீர்த்தா ஜோஷி ‘எக்ஸ்ரே’ எடுத்து பார்த்த போது குழந்தையின் வலது நுரையீரல் பகுதியில் மூச்சு குழாயில் அந்த காந்தம் சிக்கி இருப்பது தெரிய வந்தது.
எனவே அதை வெளியே எடுப்பது குறித்து டாக்டர்கள் குழு ஆலோசனை நடத்தியது. விழுங்கப்பட்ட காந்தத்தால் சிறுமியின் மூச்சு குழாயில் காயம் மற்றும் ரத்தக்கசிவு உள்ளதா? என்பதை கண்டறிய ‘பிரோன் ஜோஸ் கோப்’ கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டது.
‘எண்டோஸ்கோப்பி’ கருவி மூலம் காந்தத்தை வெளியே எடுக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என கருதி அம்முடிவு கைவிடப்பட்டது. இது போன்று பல ஆலோசனைகள் பெறப்பட்டது.
முடிவில் மயக்க மருந்து கொடுத்து சக்தி வாய்ந்த மற்றொரு காந்தம் மூலம் விழுங்கிய காந்தத்தை வெளியே எடுக்க தீர்மானிக்கப்பட்டது. மயக்க மருந்து நிபுணர் டாக்டர்களிடம் இந்த ஆலோசனையை வழங்கினார்.
இறுதியில் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. பின்னர் மயக்க நிலையில் வைத்து மற்றொரு சக்தி வாய்ந்த காந்தத்தை மூச்சு குழாய்க்குள் செலுத்தி விழுங்கப்பட்ட காந்தம் வெளியே எடுக்கப்பட்டது. அதையடுத்து சிறுமி சகஜ நிலைக்கு வந்து உயிர் பிழைத்தாள். சிகிச்சை முடிந்து மறுநாள் அவள் வீடு திரும்பினாள்.
டாக்டர்களின் இந்த முயற்சிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். சிறுமியின் பெற்றோர் நன்றி கூறினர். #Magnet
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X