search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதுகளில் சீழ் வடிதல்"

    • பனி காலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும்.
    • அழற்சியின் காரணமாக காதுகளின் உள்பகுதி பாதிக்கப்படும்.

    பனிக்காலங்களில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் செழித்து வளரும். இதனால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். குளிர்காலங்களில் குழந்தைகள் மட்டுமில்லாமல். பெரியவர்களும் அடிக்கடி காதுகளில் ஏற்படும் நோய்த்தொற்றால் சிரமப்படுவார்கள். பாக்டீரியா மற்றும் வைரசால் ஏற்படும் அழற்சியின் காரணமாக காதுகளின் உள்பகுதி பாதிக்கப்படும்.

    இதுமட்டுமில்லாமல் தொண்டைப்புண், சுவாச நோய்கள் காரணமாகவும் காதுகளில் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இதனால் காது வலி, காதுகளில் அடைப்பு ஏற்பட்ட உணர்வு, காதுகளில் இருந்து திரவம் அல்லது சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

    காது, மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகள் மூன்றும் ஒருங்கிணைந்தவையாகும். யூஸ்டாசியன் என்ற குழாய் முக்கையும், காதையும் இணைக்கிறது. வறண்ட குளிர் காற்றானது மூக்கு வழியாக உள்ளே போகும்போது. யூஸ்டாசியன் குழாய் தானாகவே மூடிக்கொள்ளும். இதன் காரணமாக காது சவ்வு இழுக்கப்பட்டு காது வலி உண்டாகும்.

     குழந்தைகளுக்கு இந்த குழாய் சிறியதாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் மென்திகக்கள் உள்ள காது பகுதிக்குள் ரத்த ஓட்டமும், அழுத்தமும் குறைவதாலும் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

    குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் 40 வயதை கடந்த பெண்களுக்கும். சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் காற்றில் உள்ள மாசுக்களும் அலர்ஜி, சைனஸ் போன்ற தொந்தரவுகளை அதிகப்படுத்தும்.

    தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை மழை மற்றும் குளிர் காலமாகும். இந்த சமயத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    வாகனங்களில் பயணிக்கும்போதும், வெளியிடங்களுக்கு செல்லும்போதும் தலை. கழுத்து மற்றும் காதுகளை நன்றாக மூடும் வகையில் குல்லா, ஸ்கார்ப் ஆகியவற்றை அணிந்து செல்ல வேண்டும்.

    காது மாஸ்க், சுகாதாரமான பஞ்சு போன்றவற்றை பயன்படுத்தி காதுகளுக்குள் குளிர்ந்த காற்று செல்லாதவாறு தடுக்க வேண்டும்.

    இஞ்சி, பூண்டு, தூதுவளை, துளசி, எலுமிச்சை, மஞ்சள் போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

    வெந்நீர் கொண்டு ஆவி பிடிப்பது, மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகளை குறைக்கும். அவ்வப்போது சூடான நீரில் உப்பு கலந்து தொண்டை நனையும் வகையில் வாய் கொப்பளிப்பது நல்லது.

    குளித்து முடித்ததும் காதுகளை மென்மையான பருத்தி துணியைக் கொண்டு ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும்.

    காதுகளுக்குள் ஊக்கு. பறவைகளின் இறகு, சாவி என கையில் கிடைத்தவற்றை கொண்டு சுத்தப்படுத்துவது ஆபத்தானது. காது வலி ஏற்படும்போது நீங்களாகவே சொட்டு மருந்து வாங்கி காதுகளில் விடுவதையும், இயர்பட்ஸ் கொண்டு காதுகளை சுத்தம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

    ×