search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ear Related Problem"

    • குழந்தைகளுக்கு அதிகமாக காணப்படும் பிரச்சினைகளாகும்.
    • சீழ் வடிவது, காதில் இயற்கையாக உற்பத்தியாகும்.

    காதில் சீழ் வடிதல், கடுமையான காதுவலி, காது வீங்கிப் போதல் போன்ற எல்லாமே குழந்தைகளுக்குத்தான் அதிகமாக காணப்படும் பிரச்சினைகளாகும். பெரியவர்களுக்கும் சில நேரங்களில் இந்தப் பிரச்சினைகள் வருவதுண்டு. காதில் இருந்து அழுக்கு நிறத்தில் நீர் வேகமாக வெளியே வடிவது, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கெட்டியாக மெதுவாக வெளியே சீழ் வடிவது, காதில் இயற்கையாக உற்பத்தியாகும்.

    மெழுகு அதிகமாகி வெளியே வடிவது, காதில் இருந்து ரத்தம் வெளியே வடிவது இவை எல்லாம் காதின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை குறிக்கும். இவை காயங்கள் மற்றும் தொற்றுநோயினால் தான் வருகின்றன. நடுக்காது பகுதியில் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களால் தான் காதில் பிரச்சினையே ஏற்படுகிறது.

    காதில் இருந்து வடியும் சீழ் திரவமானது, காதிற்குள்ளே ஏற்படும் நோய் காரணமாகவே வருகிறது. குழந்தை பருவத்தில் காதில் சீழ் வடிவதை அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் அல்லது அந்தக் குழந்தையின் பள்ளி ஆசிரியர்கள் சரியாக கவனித்திருந்தால் வளர்ந்து வயதான பின்பும் காதில் சீழ் வர வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பெரியவர்கள் ஆனபிறகு வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு காது பிரச்சினையை அதிகமாக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

    குச்சி. பேப்பர், கோழி இறகு, பென்சில், பட்ஸ் போன்றவைகளை காதில் விட்டு சுத்தம் பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டு குடைவது கூடாது. இதன்மூலம் வெளியில் உள்ள கெட்ட கிருமிகள் காதிற்குள் நுழைகிறது. காது பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய் எண்ணையில் முக்கி பிழிந்த, நன்கு இறுக்கமாக சுருட்டிய பஞ்சை காதுகளில் வைத்துக் கொண்டுதான் குளிக்க வேண்டும்.

    குளிர்காலங்களிலும், குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும் போதும் கண்டிப்பாக காதில் பஞ்சை வைத்துக் கொள்ள வேண்டும். காதுகளை மூடிய மாதிரி கழுத்தைச் சுற்றி துண்டை சுற்றிக் கொள்ள வேண்டும்.

    காதில் கடுமையான வலி, வீக்கம், சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகள் ஆரம்பித்தால் நீங்களே வைத்தியம் செய்து கொள்வதை நிறுத்திவிட்டு முதலில் அருகில் உள்ள காது மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணரைப் பார்க்க வேண்டும். அலட்சியமாக இருக்க கூடாது.

    • பனி காலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும்.
    • அழற்சியின் காரணமாக காதுகளின் உள்பகுதி பாதிக்கப்படும்.

    பனிக்காலங்களில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் செழித்து வளரும். இதனால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். குளிர்காலங்களில் குழந்தைகள் மட்டுமில்லாமல். பெரியவர்களும் அடிக்கடி காதுகளில் ஏற்படும் நோய்த்தொற்றால் சிரமப்படுவார்கள். பாக்டீரியா மற்றும் வைரசால் ஏற்படும் அழற்சியின் காரணமாக காதுகளின் உள்பகுதி பாதிக்கப்படும்.

    இதுமட்டுமில்லாமல் தொண்டைப்புண், சுவாச நோய்கள் காரணமாகவும் காதுகளில் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இதனால் காது வலி, காதுகளில் அடைப்பு ஏற்பட்ட உணர்வு, காதுகளில் இருந்து திரவம் அல்லது சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

    காது, மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகள் மூன்றும் ஒருங்கிணைந்தவையாகும். யூஸ்டாசியன் என்ற குழாய் முக்கையும், காதையும் இணைக்கிறது. வறண்ட குளிர் காற்றானது மூக்கு வழியாக உள்ளே போகும்போது. யூஸ்டாசியன் குழாய் தானாகவே மூடிக்கொள்ளும். இதன் காரணமாக காது சவ்வு இழுக்கப்பட்டு காது வலி உண்டாகும்.

     குழந்தைகளுக்கு இந்த குழாய் சிறியதாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் மென்திகக்கள் உள்ள காது பகுதிக்குள் ரத்த ஓட்டமும், அழுத்தமும் குறைவதாலும் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

    குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் 40 வயதை கடந்த பெண்களுக்கும். சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் காற்றில் உள்ள மாசுக்களும் அலர்ஜி, சைனஸ் போன்ற தொந்தரவுகளை அதிகப்படுத்தும்.

    தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை மழை மற்றும் குளிர் காலமாகும். இந்த சமயத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    வாகனங்களில் பயணிக்கும்போதும், வெளியிடங்களுக்கு செல்லும்போதும் தலை. கழுத்து மற்றும் காதுகளை நன்றாக மூடும் வகையில் குல்லா, ஸ்கார்ப் ஆகியவற்றை அணிந்து செல்ல வேண்டும்.

    காது மாஸ்க், சுகாதாரமான பஞ்சு போன்றவற்றை பயன்படுத்தி காதுகளுக்குள் குளிர்ந்த காற்று செல்லாதவாறு தடுக்க வேண்டும்.

    இஞ்சி, பூண்டு, தூதுவளை, துளசி, எலுமிச்சை, மஞ்சள் போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

    வெந்நீர் கொண்டு ஆவி பிடிப்பது, மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகளை குறைக்கும். அவ்வப்போது சூடான நீரில் உப்பு கலந்து தொண்டை நனையும் வகையில் வாய் கொப்பளிப்பது நல்லது.

    குளித்து முடித்ததும் காதுகளை மென்மையான பருத்தி துணியைக் கொண்டு ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும்.

    காதுகளுக்குள் ஊக்கு. பறவைகளின் இறகு, சாவி என கையில் கிடைத்தவற்றை கொண்டு சுத்தப்படுத்துவது ஆபத்தானது. காது வலி ஏற்படும்போது நீங்களாகவே சொட்டு மருந்து வாங்கி காதுகளில் விடுவதையும், இயர்பட்ஸ் கொண்டு காதுகளை சுத்தம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

    ×