search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swelling"

    • குழந்தைகளுக்கு அதிகமாக காணப்படும் பிரச்சினைகளாகும்.
    • சீழ் வடிவது, காதில் இயற்கையாக உற்பத்தியாகும்.

    காதில் சீழ் வடிதல், கடுமையான காதுவலி, காது வீங்கிப் போதல் போன்ற எல்லாமே குழந்தைகளுக்குத்தான் அதிகமாக காணப்படும் பிரச்சினைகளாகும். பெரியவர்களுக்கும் சில நேரங்களில் இந்தப் பிரச்சினைகள் வருவதுண்டு. காதில் இருந்து அழுக்கு நிறத்தில் நீர் வேகமாக வெளியே வடிவது, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கெட்டியாக மெதுவாக வெளியே சீழ் வடிவது, காதில் இயற்கையாக உற்பத்தியாகும்.

    மெழுகு அதிகமாகி வெளியே வடிவது, காதில் இருந்து ரத்தம் வெளியே வடிவது இவை எல்லாம் காதின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை குறிக்கும். இவை காயங்கள் மற்றும் தொற்றுநோயினால் தான் வருகின்றன. நடுக்காது பகுதியில் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களால் தான் காதில் பிரச்சினையே ஏற்படுகிறது.

    காதில் இருந்து வடியும் சீழ் திரவமானது, காதிற்குள்ளே ஏற்படும் நோய் காரணமாகவே வருகிறது. குழந்தை பருவத்தில் காதில் சீழ் வடிவதை அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் அல்லது அந்தக் குழந்தையின் பள்ளி ஆசிரியர்கள் சரியாக கவனித்திருந்தால் வளர்ந்து வயதான பின்பும் காதில் சீழ் வர வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பெரியவர்கள் ஆனபிறகு வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு காது பிரச்சினையை அதிகமாக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

    குச்சி. பேப்பர், கோழி இறகு, பென்சில், பட்ஸ் போன்றவைகளை காதில் விட்டு சுத்தம் பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டு குடைவது கூடாது. இதன்மூலம் வெளியில் உள்ள கெட்ட கிருமிகள் காதிற்குள் நுழைகிறது. காது பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய் எண்ணையில் முக்கி பிழிந்த, நன்கு இறுக்கமாக சுருட்டிய பஞ்சை காதுகளில் வைத்துக் கொண்டுதான் குளிக்க வேண்டும்.

    குளிர்காலங்களிலும், குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும் போதும் கண்டிப்பாக காதில் பஞ்சை வைத்துக் கொள்ள வேண்டும். காதுகளை மூடிய மாதிரி கழுத்தைச் சுற்றி துண்டை சுற்றிக் கொள்ள வேண்டும்.

    காதில் கடுமையான வலி, வீக்கம், சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகள் ஆரம்பித்தால் நீங்களே வைத்தியம் செய்து கொள்வதை நிறுத்திவிட்டு முதலில் அருகில் உள்ள காது மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணரைப் பார்க்க வேண்டும். அலட்சியமாக இருக்க கூடாது.

    ×