search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலனுடன் ஓட்டம்"

    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    • விசாரணையில் 9-ம் வகுப்பு மாணவிக்கும், மருங்காபுரி தெற்கு எல்லை காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னன் என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது தெரிய வந்தது.

    திருச்சி:

    திருச்சி மருங்காபுரி பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி (வயது 36). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது 9-ம் வகுப்பு படிக்கும் மகளை நேற்று முன்தினம் முதல் காணவில்லை என துவரங்குறிச்சி போலீசில் புகார் செய்துள்ளார். அதில், அருகாமையில் உள்ள பெட்டி கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை என கூறியுள்ளார்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மாயமான 9-ம் வகுப்பு மாணவிக்கும், மருங்காபுரி தெற்கு எல்லை காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னன் (வயது 22) என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது தெரிய வந்தது. இதனால் பொன்னனுடன் மாணவி ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். காதல் வலையில் சிக்கிய 9-ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    • காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபரை பார்த்து அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்

    கோவை

    கோவை செல்வபுரத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபரை பார்த்து அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான ஒரு வாரத்தில் இளம்பெண் தனது முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். சென்னையில் தங்கி இருந்த அவரை அவரது பெற்றோர் மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

    இந்தநிலையில் இளம்பெண் கர்ப்பமானார். சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மீண்டும் தனது முன்னால் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • போலீசார் சமரசம்
    • பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த நாயக்கநேரி அருகே உள்ள மலை கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து இளம்பெண்ணை வேறு ஒரு கட்டிட மேஸ்திரியுடன் கடந்த மாதம் திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் வீட்டிலிருந்து வெளியேறி காதலனுடன் சென்றார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் முன்பாக நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த டவுன் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து இருவரையும் ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். நேற்று போலீசார் 2 வீட்டு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண் தனது கணவருடன் செல்ல விருப்பம் இல்லை என்றும், காதலனுடன் செல்வதாக தெரிவித்தார்.

    இதன் பின்னர் போலீசார் சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் ஒருவர் காதலனுடன் சென்ற சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×