search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான ஒரே மாதத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்
    X

    திருமணமான ஒரே மாதத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

    • போலீசார் சமரசம்
    • பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த நாயக்கநேரி அருகே உள்ள மலை கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து இளம்பெண்ணை வேறு ஒரு கட்டிட மேஸ்திரியுடன் கடந்த மாதம் திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் வீட்டிலிருந்து வெளியேறி காதலனுடன் சென்றார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் முன்பாக நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த டவுன் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து இருவரையும் ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். நேற்று போலீசார் 2 வீட்டு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண் தனது கணவருடன் செல்ல விருப்பம் இல்லை என்றும், காதலனுடன் செல்வதாக தெரிவித்தார்.

    இதன் பின்னர் போலீசார் சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் ஒருவர் காதலனுடன் சென்ற சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×