search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "running with boyfriend"

    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    • விசாரணையில் 9-ம் வகுப்பு மாணவிக்கும், மருங்காபுரி தெற்கு எல்லை காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னன் என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது தெரிய வந்தது.

    திருச்சி:

    திருச்சி மருங்காபுரி பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி (வயது 36). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது 9-ம் வகுப்பு படிக்கும் மகளை நேற்று முன்தினம் முதல் காணவில்லை என துவரங்குறிச்சி போலீசில் புகார் செய்துள்ளார். அதில், அருகாமையில் உள்ள பெட்டி கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை என கூறியுள்ளார்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மாயமான 9-ம் வகுப்பு மாணவிக்கும், மருங்காபுரி தெற்கு எல்லை காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னன் (வயது 22) என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது தெரிய வந்தது. இதனால் பொன்னனுடன் மாணவி ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். காதல் வலையில் சிக்கிய 9-ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    • போலீசார் சமரசம்
    • பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த நாயக்கநேரி அருகே உள்ள மலை கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து இளம்பெண்ணை வேறு ஒரு கட்டிட மேஸ்திரியுடன் கடந்த மாதம் திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் வீட்டிலிருந்து வெளியேறி காதலனுடன் சென்றார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் முன்பாக நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த டவுன் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து இருவரையும் ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். நேற்று போலீசார் 2 வீட்டு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளம்பெண் தனது கணவருடன் செல்ல விருப்பம் இல்லை என்றும், காதலனுடன் செல்வதாக தெரிவித்தார்.

    இதன் பின்னர் போலீசார் சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் ஒருவர் காதலனுடன் சென்ற சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சந்தேகம் அடைந்த சீனிவாசன் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்.
    • புகாரில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி உள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் . அவரது மகள் தனம் (வயது 19). முதுநிலை பட்டப்படிப்பு முடித்து உள்ளார். சம்பவத்தன்று காலை தனம் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த சீனிவாசன் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்து ள்ளார். எங்கு தேடியும் தனம் கிடைக்க வில்லை. விசார ணையில் த னம் அதே பகுதியை சேர்ந்த சபாபதியுடன் சென்று இருப்பது தெரியவந்து உள்ளது. சபாபதிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இது குறித்து சீனிவாசன் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி உள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து தனத்தை தேடி வருகிறார்கள்.

    ×