search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணொலிகாட்சி"

    பா.ஜனதா தொண்டர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் எதிர்க்கட்சி தலைவர்களை பொய் எந்திரங்கள் என வர்ணித்தார். #BJP #NarendraModi
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுடன் நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் கலந்துரையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    அந்த வகையில் அவர் 5 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர், கட்சித் தொண்டர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அவரிடம் ஒரு தொண்டர், “நீங்கள் எப்போதெல்லாம் இந்தியாவை காப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறீர்களோ, அப்போதெல்லாம் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் கட்சிகள் ஒன்று சேர்கின்றனவே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்கையில், “எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் எதிர்மறையான வேலைகளால், நாட்டில் நடைபெறுகிற நற்பணிகளை அங்கீகரிக்காத தன்மையினால், ராணுவத்தை பற்றி தவறாக பேசுவதால் மக்கள் அவர்களை வெறுக்கிறார்கள்” என்று கூறினார்.

    மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது, “சில எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் சொல்லும் எந்திரங்களாக உள்ளனர். அவர்கள் வாயைத் திறந்தால் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளைப் போல பொய்களை சுடுகிறார்கள். ஆனால் நீங்கள் மக்களிடம் போய் உண்மையான தகவல்களை சொல்லி, அவர்களின் பொய்களை கலையுங்கள்” என்று குறிப்பிட்டார்.

    சில எதிர்க்கட்சி தலைவர்கள் ஒரே நாளிலே பல மாதிரி வேஷம் போடுகிறார்கள் எனவும் பிரதமர் மோடி சாடினார்.

    “அதே நேரத்தில் மக்கள் உண்மைகளை அறிவார்கள். நமது கட்சித் தொண்டர்களில் ஒருவர், 100 பேரிடம் போய்ப் பேசினால், அவரது நம்பிக்கை பல மடங்கு வளரும்” என குறிப்பிட்டார்.

    மத்திய அரசு, பாரதீய ஜனதா கட்சி ஆளுகிற மாநில அரசுகள் பற்றியும் பிரதமர் மோடி குறிப்பிடத் தவறவில்லை.

    இதுபற்றி அவர் கூற வந்தபோது, “நாங்கள் எல்லோரும் நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சியோ குடும்ப ஆட்சியைப் பற்றித்தான் கவலை கொள்கிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று சேருகிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் மகன்களுக்கு எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என கூறினார். 
    ஏ.பள்ளிப்பட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பாலத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஏ.பள்ளிப்பட்டியில் ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதைதொடர்ந்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி ஏ.பள்ளிப்பட்டியில் புதிய பாலத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நபார்டு மற்றும் கிராமசாலைகள் கோட்ட பொறியாளர் செல்வநம்பி, உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், குருபிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பாலக்கோடு தாலுகா கரகதஅள்ளி கிராமத்தில் ரூ.68.78 லட்சம் மதிப்பில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தினை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் மலர்விழி புதிய தீயணைப்பு நிலைய கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆனந்த், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர், கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    ×