search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்துரையாடல்"

    • நீங்கள் அனைவரும் இங்கு கூடி இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துள்ளீர்கள்.
    • ஒரு சுற்றறிக்கையை அனுப்புவதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை என்னால் உருவாக்க முடியாது.

    புதுடெல்லி:

    தேசிய படைப்பாளர்கள் விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடந்தது. முதல் முறையாக இவ்விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

    சிறந்த கதை சொல்லல் விருது, ஆண்டின் பிரபல படைப்பாளி, பசுமை சாம்பியன் விருது, சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி, மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாய படைப்பாளி, தூய்மை தூதர் விருது, கல்விப் பிரிவில் சிறந்த படைப்பாளி உள்பட 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் விருதுகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:-

    இன்று நீங்கள் அனைவரும் இங்கு கூடி இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துள்ளீர்கள். காலம் மாறும் போது, ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் போது, அதற்கு ஏற்ப மாற்றியமைப்பது ஒவ்வொரு நாட்டின் பொறுப்பாகும்.

    அந்த பொறுப்பை இன்று பாரத மண்டபத்தில் இந்தியா நிறைவேற்றுகிறது. டேட்டா புரட்சியில் இருந்து மலிவான மொபைல் போன்கள் வரை உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை உருவாக்கி உள்ளது.

    இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் பெருமை, டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்கும் இளைஞர்களுக்குச் சேரும்.

    நான் மாணவர்களுடன் தேர்வு பற்றிய விவாதம் நடத்துவது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பலர் கேலி செய்கிறார்கள். பிரதமர் ஏன் இதையெல்லாம் செய்கிறார் என்று நினைக்கிறார்கள்? எனக்குத் தெரியும். ஒரு சுற்றறிக்கையை அனுப்புவதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை என்னால் உருவாக்க முடியாது.

    ஆனால் நான் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும். நான் ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தை தவறாமல் செய்கிறேன்.

    இந்தியா, அதன் கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி உலகத்துடன் கொள்ள 'இந்தியாவில் உருவாக்கம்' இயக்கத்தைத் தொடங்குவோம். பெண்கள் சக்தியை உள்ளடக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுமாறு படைப்பாளிகளை கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கண்காட்சியில் இடம்பெற்று இருந்த கண்டுபிடிப்புகளின் செயல் விளக்கத்தை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
    • தேர்வை பயமில்லாமல் எதிர்கொள்ள எழுத்து பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி பொதுத்தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும், பயத்தையும் போக்கி துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு முதல் தேர்வும், தெளிவும் என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி வருகிறார்.

    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதுவது எப்படி? என்பது குறித்து ஆலோசனை பெற்று வருகின்றனர். பிரதமர் மோடியும் மாணவர்களிடம் பயமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 2 கோடியே 56 லட்சம் மாணவர்கள் மற்றும் 5.60 லட்சம் ஆசிரியர்கள் 1.95 லட்சம் பெற்றோர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த கலந்துரையாடலில் பிரதமர் மோடி கலந்து கெரண்டார், அவரை மாணவ-மாணவிகள் பாடல்கள் பாடி வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி அங்கு மாணவர்கள் அமைத்து இருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

    கண்காட்சியில் இடம்பெற்று இருந்த கண்டுபிடிப்புகளின் செயல் விளக்கத்தை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    இதையடுத்து பாரத் மண்டபத்தில் திரண்டு இருந்த 3 ஆயிரம் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அவரிடம் மாணவ-மாணவிகள் தேர்வு சம்பந்தமாக பல்வேறு கேள்விகள் கேட்டனர். அவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி சளைக்காமல் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-


    மாணவர்கள் முன்பு எப்போதையும் விட புதுமையாக மாறி உள்ளனர். நமது மாணவர்கள் நமது எதிர்காலத்தை வடிவமைப்பார்கள். இங்கு இடம்பெற்று இருந்த கண்காட்சியில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்து இருந்தனர். அவர்களுக்கும், அனைத்து பள்ளிகளுக்கும் நான் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த பாரத் மண்டபம் வரலாற்று சிறப்புமிக்கது. உலகின் மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் இந்த மண்டபத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்த மண்டபத்தில் தற்போது மாணவர்களாகிய நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சி எனக்கும் ஒரு தேர்வு மாதிரி தான். மாணவர்கள் எந்த பதற்றத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாக வேண்டாம். தேர்வு எழுதும் மையத்திற்கு முன்னதாகவே சென்று விடுங்கள். தேர்வு தொடங்குவதற்கு முன்பு பதற்றப்படாமல் நிதானமாக செல்லுங்கள். இதற்காக கொஞ்சநேரம் ஒதுக்கி கொள்ளுங்கள்.

    தேர்வை பயமில்லாமல் எதிர்கொள்ள எழுத்து பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள். இந்த பயிற்சி உங்களிடம் நம்பிக்கையை கொடுக்கும். திறமையை அதிகரிக்கும்.

    நண்பர்களை என்றைக்கும் எதிரிகளாக பார்க்காதீர்கள். வாழ்க்கையில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். மாணவர்களுக்கு மற்றவர்களுடன் போட்டியிடாமல் தங்களிடம் போட்டியிட வேண்டும். நெருக்கடியை கையாளும் கலையை மாணவர்கள் அவசரமின்றி படிப்படியாக கற்றுக்கொள்ள வேண்டும். நெருக்கடிக்கு மத்தியில் வெற்றி பெற வேண்டும். அதற்கு மனதிடம் அவசியம். அதற்கேற்றாற் போல உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் நம் திறமையை பாதிக்கும். முடிவு எடுப்பதில் உறுதியாக இருங்கள். உங்கள் உடல்நலனுக்கு முக்கியத்தும் கொடுங்கள்.

    செல்போனில் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை அதிகம் பார்க்காதீர்கள். இரவில் நன்றாக தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    சிறிய இலக்குகளை நிர்ணயித்து படிப்படியாக உங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வழியை நீங்கள் கடைபிடித்தால் தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடுவீர்கள்.

    மாணவர்களை போல பெற்றோர்களும் பரீட்சை சமயத்தில் மனஅழுத்தத்தை சந்தித்து வருகிறார்கள்.தயவு செய்து உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்.

    சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டுகளை தங்கள் சொந்த விசிட்டிங் கார்டு போல கருதுகிறார்கள். இது நல்லது கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஏர்வாடி சமுதாயகூடத்தில் பொதுமக்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் கலந்துரையாடினார்.
    • ஏர்வாடி சமுதாயகூடத்தில் பொதுமக்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் கலந்துரையாடினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், சின்ன ஏர்வாடி சமுதாயக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கப்படுகிறதா என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் உணவுப்பொருட்கள் சீராக கிடைக்கப்பெறுகிறதா என கேட்டறிந்தார்.

    மழைக்காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்துவதுடன், காய்ச்சல் போன்ற அறிகுறி கள் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவ கிச்சை மற்றும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி இருந்திட வேண்டும். அதேபோல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் உரிய சிகிச்சை பெற்று மழைக்காலத்தில் நோய் தொற்று இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமம், பி.எம்.வலசை பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், படகு சவாரி மேற்கொள்ளும் இடத்தில் அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஏர்வாடி மனநல காப்பகத்தின் செயல்பாடு கள் குறித்தும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்பின் போது கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் , கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்ஆனந்த், ஏர்வாடி ஊராட்சி மன்றத்தலைவர் செய்யது அப்பாஸ் உள்பட பலர் இருந்தனர்.

    • விருதுநகரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.
    • உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்ப டையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட கலெக்டர் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, 35-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிவகாசி, விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 36 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள் ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தே கங்களை அகற்றி, வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

    • அறிவியல் அற்புதம் கலந்துரையாடல் நடந்தது.
    • வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, பாஸ்கரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொடக்க கல்வித்துறையின் சார்பில் அறிவியல் அற்புதம் என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.

    தேர்த்தங்கல் பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் "தொலை நோக்கி பார்வை" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. முதன்மை கருத்தாளராக தமிழ்நாடு ஆஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் மண்டல ஒருங்கிணைப்பாளார் சொக்கநாதன், திருச்சி அண்ணா கோளரங்க உயர் தொழில்நுட்ப அலுவலர் ஜெயபால் கலந்து கொண்டனர்.

    தொலைநோக்கியின் வரலாறு, அதன் வகைகள், பயன்பாடு, பள்ளிகளில் வானவியல் மன்றம் தொடங்குதல், தொலை நோக்கி, பைனாகுலர், வானியல் கருவிகள், வானியல் அறிஞர்களின் பிறந்த நாட்களை கொண்டாடுதல், சூரிய- சந்திர கிரகண நாட்கள், நிழல் இல்லா நாள், நீண்ட பகல், இரவு நாட்கள், சம இரவு-பகல் நாட்கள், வானியல் மேற்படிப்பு அதில் உள்ள வேலை வாய்ப்புகள், இஸ்ரோவின் வரலாறு, செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சி, அதில் உள்ள படிப்புகள், வேலை வாய்ப்புகள், டெலஸ்கோப் செய்முறை பயிற்சி, ஆசிரியர்கள்- மாணவர்களுக்கான ஆஸ்ட்ரானமி பயிலரங்கு, ஆஸ்ட்ரோ போட்டோ கிராபி, போஸ்டர் தயாரிப்பு போட்டிகள், ஆஸ்ட்ரானமி இளைஞர் மாநாடு நடத்துதல், கோடை கால பயிற்சிகள், அறிவியல் பாடல்கள், ஆஸ்ட்ரோ ஒலிம்பியார்ட், ஆஸ்ட்ரானமி மென்பொருட்கள் ஆகிய தலைப்புகளில் கலந்துரை யாடப்பட்டது.

    நிகழ்ச்சியை நயினார் கோவில் வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, பாஸ்கரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்ட நடுநிலைப் பள்ளி தலைமை ஆரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மாணவர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இல்லம் தேடிக்கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முனியசாமி நன்றி கூறினார்.

    • அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார்
    • கலெக்டர் பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைகள் குறித்தும், மாணவ, மாணவிகள் கற்றல், கற்பித்தல் குறித்து மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து, பார்வையிட்டு, உரையாடினார்.

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு முதலமைச்சரால் மக்க ளுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் உரிய முறையில் பொதுமக்களுக்கு சென்றுசேரும் வகையில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து மக்கள் நலத்திட்டங்களை துரிதப்படுத்தி வருகிறார்கள். அதன்படி, மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் விளையாட்டு மீதுள்ள ஆர்வத்தினை கேட்டறிந்தார்கள்.

    மேலும் பள்ளிக்குத் தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் மின் வசதிகள் உள்ளிட்டவைகள் போதுமான அளவில் உள்ளனவா என்பது குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் விளையாட்டின் மீது ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக போதுமான அளவில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மைதானம் உள்ளனவா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.

    பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைகள் குறித்தும், மாணவ, மாணவிகள் கற்றல், கற்பித்தல் குறித்து மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து, பார்வையிட்டு, உரையாடினார். ஆதனைத் தொடர்ந்து, அன்னவாசல் அரசு மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.மருத்துவமனை வளாகத்தை தூய்மையாகவும், சுகாதாரமான முறையில் பராமரித்திடவும், மருத்துவமனை வளாகத்தில் நிழல் தரும் மரங்களை நடுவதற்கும் மருத்துவர்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.

    • திருகோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
    • பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு நுழைவுத் தேர்வு பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில், மேல்நிலை வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் மற்றும் நியூ ஹரிஸோன் அகாடமியுடன் இணைந்து நீட், ஜே.இ.இ பயிற்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. "சேர்ந்தே உயர்த்துவோம்" என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையேற்றார். அவர் பேசும்போது, இன்றைய நிலையில் பள்ளியிறுதி வகுப்புக்குப்பிறகான படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அப்படி எழுதுகின்ற நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுகின்ற மாணவர்கள்தான் நல்ல தரமான கல்லூரிகளில் மேற்படிப்பை தொடர முடியும். அதற்கான பயிற்சிகளைத் தேடி பெருநகரங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. நம்பள்ளியில் இந்த ஆண்டு முதல் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை நியூ ஹரிஸோன் அகாடமியுடன் இணைந்து வழங்குகின்றோம். மேலும் மாணவர்கள் ஆடிட்டர் படிப்பைத் தெரிவு செய்ய சி.ஏ. படிப்புக்கான பயிற்சியை பிரசாத் ஆடிட்டருடன் இணைந்து நம் பள்ளியில் வழங்க உள்ளோம்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இலட்சியங்களைக் கேட்டறிந்து அவர்கள் கடுமையாக உழைக்க உறுதுணையாக இருக்கவேண்டும் என்று பேசினார்.

     தொடர்ந்து நியூ ஹரிஸோன் அகாடமியின் இயக்குநர் டேவிட்ரிச்சர்ட்பார்டன் பேசினார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் அபிராமசுந்தரி வரவேற்க, நிறைவாக துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு நுழைவுத் தேர்வு பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டர். விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, வரலெட்சுமி, கோமதி. மேலாளர் ராஜா, ஆசிரியர் கணியன் செல்வராஜ் நியூ ஹரிஸோன் அமைப்பினைச் சேர்ந்த கண்ணன், கோபு, கலைவாணி, இராஜகோபால் ஆடிட்டர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டர். நிகழ்வை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.

    • தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார்.
    • புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

    மேட்டூர்:

    தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார். புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

    மேலும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், பயிற்சி காவலர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கான உணவகத்தை ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி காவ லர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) விஜயகு மார், போலீஸ் கண்கா ணிப்பாளர்கள் சிவகுமார் (சேலம்), ஜவகர் (ஈரோடு), காவலர் பயிற்சி பள்ளி கண்காணிப்பாளர் சந்திர மௌலி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை காவலர் பயிற்சி பள்ளி துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் நாகராஜ், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, ராஜேஷ் ஆகியோர் செய்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.
    • படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார்.

    கடலூர்:

    விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் தீவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாணவர்களை வரவேற்று இருக்கையில் அமர வைத்தார். பின்னர் மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.

    நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். இப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறேன். நீங்களும் ஒழுக்கத்துடன் நன்றாக படித்து பெரிய பதவி வகிக்க வேண்டும் எனவும், ஒழுக்கம் குறித்தும், படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குளிர்பானம் கொடுத்தும், பேனா, பென்சில் ,ரப்பர் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்வித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னாலர்வலர்கள் சுகுணா ,சிந்தனை செல்வி, சமையலர் பார்வதி ஆகியோர் உடன் இருந்தனர். 

    • கலந்துரையாடல் கல்வி, கலாச்சார பரிமாற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர்
    • தமிழக போலீசாரின் செயல்பாட்டிற்கு பாராட்டு

    திருச்சி, 

    சுவீடன் நாட்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் கல்வி கலாச்சார பரிமாற்ற குழு பயணமாக இந்தியா வந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர்கள் இந்தியாவின் கல்வி முறை மற்றும் கலாச்சாரங்கள் குறித்து பலதரப்பினருடன் கலந்து ரையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுவீடன் மாணவ குழுவினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவை சந்தித்தனர். சுவீடன் நாட்டை சேர்ந்த 3 ஆசிரியர்கள், அந்நாட்டில் 12ம் வகுப்பு பயிலும், 11 மாணவ, மாணவியர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, இந்திய கல்வி, கலாச்சாரம், தமிழக காவல்துறையின செயல்பாடுகள், செஸ் ஒலிம்பியா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மாநகர கமிஷனர் பதிலளித்தார். மேலும் சுவீடன் மாணவர்களுடன், தனது பணி அனுவப வத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.இது குறித்து சுவீடன் பள்ளி மாணவர்கள் கூறும்போது, போலீஸ் கமிஷனருடன் கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவரின் பேச்சில் இருந்து ஏராளமான குறிப்புகள் நாங்கள் எடுத்து உள்ளோம். தமிழக காவல்துறை மக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளதையும், பெருமை கொள்ளும் விதமாக செயல்படுவதையும் வியந்து கேட்டோம் என்று அவர்கள் கூறினார்கள்.

    • மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
    • அப்துல் கலாமின் பொன்வரிகளான கனவு காணுங்கள் என்பதை மேற்கோள் காட்டி எம்.கே.ஜானகிராமன் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவரும், உளவியலாளரும், ஊக்கமளிக்கும் பேச்சாளரும், ஓமன் சலாலாவில் இந்திய கவுன்சில் கிளப்பிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான டாக்டர் எம்.கே.ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பொன்வரிகளான கனவு காணுங்கள், தூக்கத்தில் வருவது அல்ல கனவு, நம்மை தூங்க விடாமல் செய்வதே கனவு என்று மேற்கோள் காட்டி பேசினார். மேலும் மாணவர்கள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு தொடர்புத்திறன், தன்னம்பிக்கை, சுய உந்துதல், நேர மேலாண்மை, ஒழுக்கம் போன்ற நற்பண்புகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, கணித துறை தலைவி வாசுகி, வேதியியல் துறை பேராசிரியர் ஜோதி ஸ்டெல்லா ஆகியோர் செய்து இருந்தனர்.

    மதுரை எஸ்.பி.ஜே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் பங்கேற்றார்.
    மதுரை


    மதுரை அவனியாபுரம் கல்குளம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஜே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் பி.அபர்ணா வரவேற்றார். 

    இதில் மூத்த விஞ்ஞானி எம். சிவசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார். 

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஜே.பழனிச்சாமி, சேர்மன் எஸ்.பி.ஜெய பிரகாசம், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஜெ.அபி லாஷ், டாக்டர் சி.கோபால கிருஷ்ணன், டாக்டர் ஏ. ஆனந்தகுமார் மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து  கொண்டனர்.
    ×