search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்களோடு கலந்துரையாடல்
    X

    ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்களோடு கலந்துரையாடல்

    • திருகோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
    • பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு நுழைவுத் தேர்வு பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில், மேல்நிலை வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் மற்றும் நியூ ஹரிஸோன் அகாடமியுடன் இணைந்து நீட், ஜே.இ.இ பயிற்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. "சேர்ந்தே உயர்த்துவோம்" என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையேற்றார். அவர் பேசும்போது, இன்றைய நிலையில் பள்ளியிறுதி வகுப்புக்குப்பிறகான படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அப்படி எழுதுகின்ற நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுகின்ற மாணவர்கள்தான் நல்ல தரமான கல்லூரிகளில் மேற்படிப்பை தொடர முடியும். அதற்கான பயிற்சிகளைத் தேடி பெருநகரங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. நம்பள்ளியில் இந்த ஆண்டு முதல் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை நியூ ஹரிஸோன் அகாடமியுடன் இணைந்து வழங்குகின்றோம். மேலும் மாணவர்கள் ஆடிட்டர் படிப்பைத் தெரிவு செய்ய சி.ஏ. படிப்புக்கான பயிற்சியை பிரசாத் ஆடிட்டருடன் இணைந்து நம் பள்ளியில் வழங்க உள்ளோம்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இலட்சியங்களைக் கேட்டறிந்து அவர்கள் கடுமையாக உழைக்க உறுதுணையாக இருக்கவேண்டும் என்று பேசினார்.

    தொடர்ந்து நியூ ஹரிஸோன் அகாடமியின் இயக்குநர் டேவிட்ரிச்சர்ட்பார்டன் பேசினார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் அபிராமசுந்தரி வரவேற்க, நிறைவாக துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு நுழைவுத் தேர்வு பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டர். விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, வரலெட்சுமி, கோமதி. மேலாளர் ராஜா, ஆசிரியர் கணியன் செல்வராஜ் நியூ ஹரிஸோன் அமைப்பினைச் சேர்ந்த கண்ணன், கோபு, கலைவாணி, இராஜகோபால் ஆடிட்டர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டர். நிகழ்வை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×