search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில தொழிலாளர்களுடன் டி.எஸ்.பி கலந்துரையாடல்
    X

    சங்ககிரியில் வடமாநில தொழிலாளர்களுடன் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கலந்துரையாடிய காட்சி. 

    வடமாநில தொழிலாளர்களுடன் டி.எஸ்.பி கலந்துரையாடல்

    • சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சங்ககிரி டி.எஸ்.பி ஆரோக்யராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், சங்ககிரியில் பணியாற்றும் பீகார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு உதவிகள் செய்யப்பட்டு உள்ளது. அதனால் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாமல் பணி செய்யலாம் என்றார்.

    இதில், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ சுதாகரன், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவன சேர்மன் அன்பழகன், நிர்வாக இயக்குனர் ராஜராஜன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×