search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் திடீர் ஆய்வு"

    • பஸ் நிலைய கடைகள் ஏலம்
    • கோவில் அருகே உள்ள நுழைவாயில் வழியாக அனுமதிப்பது குறித்து ஆலோசனை

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ஆய்வு செய்தார். மேயர் சுஜாதா மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உடனிருந்தனர். பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது;

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு உள்ள கடைகளை ஏலம் விடுவது குறித்து மாநகராட்சி முடிவு செய்யும். மேலும் தற்காலிகமாக கடைகள் அமைப்பது குறித்தும் மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்வார்கள்.

    தடுப்பு சுவர் அகற்றப்படும்

    பஸ் நிலையம் சுத்தமாக உள்ளது மேலும் சில பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்திற்கு வெளியே தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கால்வாய் அமைத்து பாதாள சாக்கடை திட்டத்துடன் இணைக்கப்படும்.

    இதன்மூலம் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியும்.புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடி செல்லும் பாதையில் நடுவில் உள்ள தடுப்புச் சுவர் முழுவதுமாக அகற்றப்படும்.

    காட்பாடி குடியாத்தம் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் செல்லியம்மன் கோவில் நுழைவாயில் வழியாக உள்ளே வருவதற்கு அனுமதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு ஆஸ்பத்திரியில மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
    • ரேசன் கடையில் அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி:

    கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்தகத்தில் வழங்கப்படும் மருந்து,

    மாத்திரைகளின் இருப்பு, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து, ரேசன்கடையில் விற்பனை முனைய இயந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • சின்னமலையூரில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழக அரசின் அனுமதி பெற்று விரைவில் மலை கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றார்

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர், குட்டுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரிய மலையூர், சின்னமலையூர், பள்ளத்துக்காடு, வலசு உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன.

    சின்னமலையூரில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு மலைவாழ் மக்களிடம் பேசிய அவர் விரைவில் மலையூர் கிராமத்தில் புதிய ரேசன் கடை அமைக்கப்படும், ஒவ்வொரு மாதம் மருத்துவ உதவிகள் செய்ய 2 செவிலியர்கள் அனுப்பபடுவார்கள் .

    தமிழக அரசின் அனுமதி பெற்று விரைவில் மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும், தகுதியுள்ள மலை கிராம மக்களுக்கு தனி நபர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்த ஊருக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெங்கராஜன், தாசில்தார் சுகந்தி, மண்டல துணை வட்டாட்சியர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிகிச்சை குறித்து பல்வேறு புகார்கள்
    • கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண்கள் இறந்து விடுவதாகவும், நோயாளி களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை எனவும், போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிப்பதில்லை எனவும், பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.

    இதனை அடுத்து நேற்று திடீரென வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, உள்நோயாளிகள்‌ சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு சென்று பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோய்கள் கர்ப்பிணி களிடமும் குறைகளை கேட்டு அறிந்தார்.

    பின்னர் உடன் அரசு மருத்துவமனை டாக்டர்கள். சிவசுப்ரமணியன், செந்தில்குமார், சத்யபாக்கியலட்சுமி, டேவிட் விமல்குமார், பார்த்திபன் ஆகியோரிடம் மருத்துவமனையில் உள்ள நிலைகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    • கிராம நிர்வாக அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பொதுமக்களிடம் சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் எம்.சுப்புலாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட மனுக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்த பதிவேடுகள் மற்றும் அரசு இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பொதுமக்களிடமிருந்து நேரடியாக மற்றும் அரசு இணையதளத்தின் வாயிலாக பெறப்படும் மனுக்கள் மீது காலதாமதமின்றி உரிய விசாரணை மேற்கொண்டு, பயன்கள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கிராம நிர்வாக அலுவலரை அறிவுறுத்தினார். மேலும், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மனு அளித்திட வருகை தந்த பொதுமக்களிடம் கலெக்டர் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து, தேக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, பள்ளி வகுப்பறை, சமையலறை, குடிநீர், மின்வசதி, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள், சுகாதாரப்பணிகள், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சமையலறையினை சுத்தமா கவும், சுகாதாரமாகவும் வைத்திட சமையலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் எம்.சுப்புலாபு ரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைக்கு வந்த பொதுமக்களிடம் சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

    • ஆதிதிராவிடர் அரசு மாணவியர் விடுதியின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • அரசு விடுதிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காப்பாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி–க்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் அரசு மாணவியர் விடுதியின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது விடுதியில் பணியாற்றும் பணி–யாளர்கள் எண்ணி க்கை, வருகை பதிவேடு, விடுதிகளில் மாணவிகள் தங்கும் அறை, சமையலறை, மாணகளின் எண்ணிக்கை, வருகை–ப்பதிவேடு, விடுதி யில் வழங்கப்படும் உணவின் தரம், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடி ப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளை கல்வி கற்க செய்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி சார்ந்த திட்டங்கள் மட்டுமல்லாமல் தங்கி பயிலுவதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்து வருகிறது.

    எனவே, விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களை முழுமையாக விடுதி கா–ப்பாளர்கள் கண்காணித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசின் மூலம் பெற்று தந்து அவர்களை நல்ல முறையில் கல்வி கற்க செய்திட வேண்டும் என விடுதி காப்பாளருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தேனியில் ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • விளையாட்டு வசதியினை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    தேனி

    தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மாணவர்கள் தங்கும் அறையினை சுத்தமாக வைத்து கொள்வதையும், மாணவர்கள் பள்ளி முடிந்து விடுதிக்கு வந்தவுடன் அவர்கள் கை, கால்களை தண்ணீரில் கழுவிய பின் விடுதிக்குள் அனுமதிப்பதையும் முறையாக காப்பாளர் தினந்தோறும் கண்காணித்திடவும், விடுதியின் சுற்றுப்புறப்பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடவும், தினந்தோறும் மாணவர்கள் பயன்படுத்தும் குளியலறை மற்றும் கழிப்பறை பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் கண்காணித்திடவும் அறிவுரைகள் வழங்கினார்.

    முன்னதாக, விடுதியில் பணியாற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை, வருகை பதிவேடு, விடுதிகளில் மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து ஆய்வு செய்தார். மேலும் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    மாணவர்களிடம் கலந்துரையாடிய போது, விடுமுறை நாட்களில் விளையாட்டு சம்பந்தமாக ஏதேனும் வசதி ஏற்படுத்தி தரவேண்டி கோரிக்கை வைத்தனர். அதனைத்தொடர்ந்து, கலெக்டர் விளையாட்டு வசதியினை ஏற்படுத்தி தருவதாக மாணவர்களிடம் உறுதியளித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    ×