search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector surprise inspection"

    • புகார்கள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார்
    • கைததிகள் அறை, ஆயுதங்கள் வைப்பறை அதிகாரிகளிடம் விரவங்களை கேட்டறிந்தார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா போலீஸ் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்த பதிவேடுகள், இணைய வழியாக பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள் குறித்த பதிவேடுகளையும் கைதிகள் அறை, காவலர்கள் ஓய்வெடுக்கும் அறை, ஆயுதங்கள் வைப்பறை, வரவேற்பாளர் அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு போலீஸ் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாராஜா, சீனிவாசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கூடச்சேரியில் உள்ள குவாரியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கூடச்சேரியில் உள்ள குவாரியில் கலெக்டர் டாக்டர். உமா ஆய்வு மேற்கொண்டார்.

    புன்செய் இடையார் மேல்முகம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன்முறைபடுத்தும் பணிகள் மற்றும் பரமத்தி தாசில்தார் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், இணைய வழி பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் தற்போதைய நிலவரம், முன்னேற்றம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து தாசில்தார் பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் நலப் பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம், மருத்துவ உபகரணங்கள், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை கர்ப்பிணித் தாய்மார்களின் பரிசோதனைகள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்ட விபரங்களை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    முன்னதாக நாமக்கல் தாலுகா, கோனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மெய் நிகர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்கள் வருகை உள்ளிட்ட விபரங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

    நிகச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி, துறைச்சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு மணி நேரம் நடந்தது
    • பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 22 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 27-ந் தேதி 7 பேர் அங்குள்ள கட்டிடத்தின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அங்கிருந்த மின்விசிறி, டேபிள், சேர், டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார். அன்று இரவே அங்கு பணியில் இருந்த வார்டன்களை சரமாரியாக தாக்கி விட்டு சுவரேறி குதித்து தப்பி சென்றனர். போலீசார் அவர்கள் தேடி பிடித்தனர். ஒருவர் கோர்ட்டில் சரணடைந்தார்

    கடந்த வியாழக்கிழமை 5 சிறுவர்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி சென்றனர். அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகம் அருகே மடக்கிப்பிடித்து ஒப்படைத்தனர்.

    சிறுவர்கள் அடிக்கடி தப்பிச்செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உதவி கலெக்டர் கவிதா தாசில்தார் செந்தில் டிஎஸ்பி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் இன்று காலை சிறுவர் பாதுகாப்பு இல்லத்துக்கு சென்றனர்.

    அப்போது அங்குள்ள சிறுவர்களுக்கு கலெக்டர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனர். இது வழக்கமான ஆய்வு தான் என கலெக்டர் தெரிவித்தார்.

    • பொருட்களின் தரம் குறித்தும் ேசாதனை
    • ஆதார் மையத்தை பார்வையிட்டார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் மற்றும் ரேசன் கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

    அப்போது தாலுகா அலுவலகத்தில் பராமரிக்கப் பட்டு வரும் பல்வேறு பதிவேடுகள், நாட்டறம்பள்ளி கற்பகம் கூட்டுறவு ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியிலும் ஆய்வு செய்தார்.

    மாணவர்களுக்கு சுத்தமாகவும், தரமாகவும் உணவினை தயார் செய்து வழங்க வேண்டும் எனவும், விடுதி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்தினார்.

    தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பதிவேடு, இ-ஆபிஸ் பணிகள், பட்டா மாற்றம், 23 வகையான சான் றிதழ் வழங்கப்படும் பணிகளை பார்வையிட்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதார் மையத்தை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது தாசில்தார்கள் குமார், சுமதி, வருவாய்த்துறை பணியாளர்கள், விடுதி காப்பாளர் உடனிருந்தனர்.

    • பத்திரமாக வைத்து கொள்ள அறிவுரை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டை பெறாத குடும்பங்கள் அதிக அளவில் உள்ளதாக அரசு விழாவில் அமைச்சர் பெருமக்களிடையே பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். உடனடியாக சிறப்பு முகாமை ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டனர்.

    அதன் அடிப்படையில் நேற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை பெறாத குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கான சிறப்பு பதிவு முகாம் வள்ளுவம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் மொத்தம் 536 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒலிபெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு, மருத்துவ காப்பீடு பதிவு செய்யும் முகாமிற்கு பொதுமக்கள் வருகை தந்தனர்.

    அந்த முகாம் நடைபெறுவதை கலெக்டர் வளர்மதி நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது காலையில் இருந்து சுமார் 100 குடும்ப அட்டைதாரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களில் இதுவரை 65 குடும்ப அட்டைதாரர்களை பரிசோதித்ததில் 25 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே மருத்துவ காப்பீடு அடையாள அட்டை இல்லை என தெரிகிறது. பெரும்பான்மையான மக்கள் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வைத்துள்ளனர்.

    அதையும் கொண்டு வந்து காண்பித்து உறுதி செய்து சென்றனர். மருத்துவ காப்பீடு அட்டை இல்லாத குடும்பங்களுக்கு உடனடியாக பதிவு செய்து அவர்களுக்கான அடையாள அட்டை நகல் உடனு க்குடன் வழங்கப்ப டுகிறது என தெரிவித்தனர். பொதுமக்கள் இந்த மருத்துவ காப்பீடு அடையாள அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வருடத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 இலட்சம் வருடந்தோறும் மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக பெறுவதற்கு இந்த அடையாள அட்டை பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    இதை பத்திரமாக வைத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். நேற்றும் மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு நாட்கள் இந்த கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தி அனைவர்களிடமும் அடையாள அட்டைகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய கலெக்டர் ச.வளர்மதி கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் தாரகேஸ்வரி, தாசில்தார் நடராஜன், மருத்துவ காப்பீட்டு அட்டை வாசுதேவன், வள்ளுவம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் சின்னப்பொண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்
    • 156 விவசாயிகள் பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து சரியான அளவு நெல்களை கொள்முதல் செய்யப்படு கிறதா? அவர்களுக்கான நெல் விலை உடனுக்குடன் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து கலெக்டர் வளர்மதி நேற்று நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

    நெமிலி வட்டம் பனப்பாக்கம் பேரூராட்சி அடுத்த குச்சிதோப்பு பகுதியில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் நெல் மூட்டைகள் குறித்து கேட்டறிந்தார். மையத்தில் 156 விவசாயிகள் பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர்.

    இதுவரையில் 103 விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் வழங்கி உள்ளனர். 40 கிலோ மூட்டைகள் விதம் எடை போட்டு 6,051 நெல் மூட்டைகள் இதுவரையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். பின்னர் விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்து நெல் மூட்டைகள் வழங்கிய பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதில் அதிக நெல் மூட்டைகள் போட்ட விவசாயி மேலப்புலம் புதூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாய வெங்கடேசன் என்பவர் விவரங்களை கேட்டு கலெக்டர் வளர்மதி மேலப்புலம் மோட்டூர் ஊராட்சிக்கு நேரடியாக சென்று வெங்கடேசன் விவசாய நிலத்தை பார்வையிட்டார்.

    அங்கு வந்திருந்த வெங்கடேசன் மகன் ராஜேஷ் என்பவரிடம் அவருடைய விவரங்களை கேட்டறிந்தார்.சுமார் 16 ஏக்கர் நிலம் உள்ளதை விவசாயி தெரிவித்தார். இவைகளில் கோ 51 ரக நெல் பயிரிடப்பட்டு சுமார் 205 மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளதாக விவசாயி தெரிவித்தார். சரியான முறையில் விவசாயி நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளதை கலெக்டர் வளர்மதி உறுதி செய்தார். நெல் விற்பனை செய்தமைக்கான பணம் மூட்டைக்கு ரூ.1,600 வழங்கப்பட்டுள்ளது என்று விவசாயி தெரிவித்தார். அதற்கான பணங்கள் வங்கி கணக்கில் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து நெமிலி வட்டம் நெல்வாய் ஊராட்சி எஸ் கொளத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது இம்மையத்தில் 174 விவசாயிகள் பதிவு செய்து டோக்கன் பெற்றுள்ளனர். அவர்களில் 140 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 14,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி வரையில் நெல்கொள்முதல் பெறப்பட்டவர்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்ப ட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வினில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேவிபிரியா, திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, துணை இயக்குனர் வேளாண்மை விஸ்வநாதன், வட்டாட்சியர் சுமதி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.19 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது
    • 2 நாட்களுக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு

    ஆற்காடு:

    ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சியில் ஆதி திராவிடர் காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது 2 நாட்களுக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.

    திட்ட இயக்குனர் லோகநாயகி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிரிஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ராஜேஷ், ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் கார்மேகம் தலைமையில் அனைத்து அரசு துறை தலைமை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • மேலும் நேற்று பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலைகிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் முழுமையாக கிடைக்கப் பெறுகிறதா என்பது குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அனைத்து அரசு துறை தலைமை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    தொடர்ந்து ஏற்காடு மலை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, பொறுப்பு அலுவலர்கள் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்பு அலுவலர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    மேலும் நேற்று பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மலை கிராமங்களுக்கு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழுமையாக கிடைத்திடும் வகையில் அரசு அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து ஏற்காடு பகுதியில் உள்ள அரசு மாணவர் மற்றும் மாணவிகள் தங்கும் விடுதிகளில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? அவர்களுக்கு முழுமையான வசதிகள் கிடைக்கிறதா? என்றும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பொது இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவியர்களின் வருகை குறித்தும், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டு அறிந்தார்.

    இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர், ஆவின் பொதுமேலாளர் விஜய் பாபு, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, தனித்துறை ஆட்சியர் மயில், இணை இயக்குனர் வளர்மதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்
    • ஏதேனும் குறையிருந்தால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி ராணிப்பேட்டை, சிப்காட் பெல், அண்ணா நகர் பகுதி ரேசன் கடை, சிப்காட் நரசிங்கபுரம் மற்றும் ராணிப்பேட்டை நகராட்சி பாரதி நகர் ஆகிய 4 ரேசன் கடைகளில் திடீரென சென்று பார்வையிட்டார். பின்னர் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு அளவினை ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து ரேசன் கடைகளுக்கு வருகை தந்திருந்த பொது மக்களிடம் பொருட்கள் முறையாக கிடைக்கின்றதா? பொருள்கள் தரம் எவ்வாறு உள்ளது என கேட்டதற்கு பொருட்கள் கிடைக்கின்றது.

    கோதுமை போதிய அளவில் கிடைக்க பெறுவதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து, கோதுமை அளவு ஒவ்வொரு கடைக்கும் இருக்கின்றதா என்பதை அறிந்து அதனை உடனடியாக பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

    மேலும் ரேசன் கடைகளில் இலவச வேட்டி மற்றும் சேலை இருந்ததை பார்த்து உடனடியாக குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகம் செய்திட உத்தரவிட்டார். ஏதேனும் குறையிருந்தால் உடனே தெரிவிக்கலாம் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

    தொடர்ந்து ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு, விற்பனை குறித்து, கைபேசி எண் வாயிலாக அறிந்து, பொருட்களின் இருப்பு எடையை அளவிட்டுப் சரி பார்த்து உறுதிப்படுத்தினார்.

    இந்த ஆய்வின் போது வாலாஜா தாசில்தார் நடராஜன் மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

    • நல திட்டங்கள் பொதுமக்களை நேரடியாக சென்றடைகிறதா என கேட்டறிந்தார்
    • அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு வந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆலங்காயம் வட்டார அரசு சமுதாயம் சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது தமிழக அரசின் அனைத்து திட்டங்கள், செயல்பாடுகள், நிலைய வளாக தூய்மை, தேசிய குடற்புழு நீக்க திட்டம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆய்வு செய்து திட்டங்களின் பலன்கள் மக்களை நேரடியாக சென்றடைகிறதா என்று கேட்டறிந்து அறிவுரைகள் வழங்கினார்.

    ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ச. பசுபதி மருத்துவ பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    • நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரது 3 1/2 வயது மகள் சிவதர்ஷினி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
    • அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி மாலை சிறுமி உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரது 3 1/2 வயது மகள் சிவதர்ஷினி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்ததால் கரூரில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி மாலை சிறுமி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தையும், சோகத்தை யும் ஏற்படுத்தியது. மேலும் அப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து நாமக்கல் மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கலெக்டர் ஆய்வு

    இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங், நேற்று குழந்தை இறந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ குழுவிடம் விவரம் கேட்ட றிந்தார். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் பங்கு முக்கியமானது எனக் கூறி பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

    அப்போது அங்கு வந்த விவசாயிகள், நன்செய் இடையாறு மற்றும் பாலப்பட்டி பகுதியில் சரியான நேரத்தில் கால்நடை மருத்துவர்கள் வருவதில்லை எனவும், இதனால் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் கால்நடைகளை அழைத்து செல்லவேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க 15 வட்டாரங்களிலும் 318, பேரூராட்சி பகுதிகளில் 190, நகராட்சியில் 295 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை, மருந்து தெளிக்கப்பட்டு, புகை மருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

    ஆய்வின் போது மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன், உதவி இயக்குனர்( ஊராட்சிகள்) கலை2யரசு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி, பாலப்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் பரமேஸ்வரி, வட்டார மேற்பார்வையாளர் செல்வராஜ், மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வடகரையாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு உள்ளிட்ட வைகளை ஆய்வு செய்து பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
    • அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை, எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வடகரையாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு உள்ளிட்ட வைகளை ஆய்வு செய்து பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை, எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு பயிலும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதா மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை குறித்தும், அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையல் கூடத்தில் வழங்கப்பட்டு வரும் உணவுகள் விவரங்கள் குறித்தும், அட்டவணைப்படி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றனவா? என கேட்டறிந்தார்.

    நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில் அருகில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சமையல் அறையுடன் கூடிய சமுதாய கூடம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டார். பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார். பள்ளபாளையத்தில் ரூ.20.57 லட்சம் மதிப்பீட்டில் மயானம் அமைக்கும் பணி, மாரியம்மன் கோவில் அருகில் ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் குறித்து விரிவாக கேட்டு அறிந்து, விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வி.புதுப்பாளை யம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு வரும் பகுதிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம், சங்கர், வடகரையாத்தூர் ஊராட்சி தலைவர் மஞ்சுளா குணசேகரன், ஊராட்சி செயலர் பொன்னுவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×