என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடகரையாத்தூர் ஊராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
- கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வடகரையாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு உள்ளிட்ட வைகளை ஆய்வு செய்து பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
- அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை, எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வடகரையாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு உள்ளிட்ட வைகளை ஆய்வு செய்து பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை, எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு பயிலும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதா மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை குறித்தும், அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையல் கூடத்தில் வழங்கப்பட்டு வரும் உணவுகள் விவரங்கள் குறித்தும், அட்டவணைப்படி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றனவா? என கேட்டறிந்தார்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில் அருகில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சமையல் அறையுடன் கூடிய சமுதாய கூடம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டார். பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார். பள்ளபாளையத்தில் ரூ.20.57 லட்சம் மதிப்பீட்டில் மயானம் அமைக்கும் பணி, மாரியம்மன் கோவில் அருகில் ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் குறித்து விரிவாக கேட்டு அறிந்து, விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வி.புதுப்பாளை யம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு வரும் பகுதிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமசிவம், சங்கர், வடகரையாத்தூர் ஊராட்சி தலைவர் மஞ்சுளா குணசேகரன், ஊராட்சி செயலர் பொன்னுவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்