search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • சிகிச்சை குறித்து பல்வேறு புகார்கள்
    • கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண்கள் இறந்து விடுவதாகவும், நோயாளி களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை எனவும், போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிப்பதில்லை எனவும், பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.

    இதனை அடுத்து நேற்று திடீரென வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, உள்நோயாளிகள்‌ சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு சென்று பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோய்கள் கர்ப்பிணி களிடமும் குறைகளை கேட்டு அறிந்தார்.

    பின்னர் உடன் அரசு மருத்துவமனை டாக்டர்கள். சிவசுப்ரமணியன், செந்தில்குமார், சத்யபாக்கியலட்சுமி, டேவிட் விமல்குமார், பார்த்திபன் ஆகியோரிடம் மருத்துவமனையில் உள்ள நிலைகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    Next Story
    ×