search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருடசேவை"

    • பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.
    • புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு உதயகருட சேவை நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி பெருமாள் அலங்கரிக்கப் பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    இதைதொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் கோவில் செயல் அலுவலர் பரமானந்தம், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, வருகிற 9-ம் தேதி தங்க கருடசேவையும், 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களா–சாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, வருகிற 9-ம் தேதி தங்க கருடசேவையும், 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மாதவன், ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×