search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
    X

    பிரமோற்சவ விழா கொடியேற்றம்

    கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

    விழாவையொட்டி, வருகிற 9-ம் தேதி தங்க கருடசேவையும், 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களா–சாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, வருகிற 9-ம் தேதி தங்க கருடசேவையும், 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மாதவன், ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×