search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரு.கருப்பையா"

    • வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையன்று எதிலும் எச்சரிக்கை தேவை.
    • பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கமளிக்கிறார்.

    மதுரை

    வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையாகும். புதன் கிழமை அன்று நிறைந்த அமாவாசையாக வருகிறது. மேலும் இந்த ஆடி மாதத் திலே இரண்டு அமாவா–சைகள் வருகின்றன. இதில் முதலில் வந்த அம்மாவா–சையை சூனிய அமாவாசை என்று சொன்னார்கள். எனவே இந்த அமாவாசை ஆனது பவர்புல் அமாவா–சையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அதனால் எதிலும் எச்ச–ரிக்கையாக இருப்பது நல் லது என்று பிரபல ஜோதி–டர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். எச்சரிக் கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது என்று கரு.கருப்பையா கூறியுள் ளார். பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு அமா–வாசையோ அல்லது இரண்டு பவுர்ணமியோ வந்தால் அந்த மாதத்திலே புதிய காரியங்கள் தொடங் கக்கூடாது என்று சொல்லு–வார்கள்.

    ஒரு சிலர் அமாவாசையை நிறைந்த நாள் என்று சொல்லி புதிய காரியங்களை தொடங்குவார்கள். ஒரு சிலர் சற்று யோசித்து தொடங்க மாட்டார்கள். மேலும் மறுநாள் பிரதமை என்பதால் சந்திரனின் பலம் குறைந்திருக்கும் என்ற காரணத்தால், அதற்கு அடுத்த நாள் மூன்றாம் பிறை புதிய காரியங்களை தொடங்குவார்கள்.

    ஆக மொத்தத்தில் வரு–கின்ற அமாவாசையில் நெருப்பு, மின்சாரம் போன்ற வற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வண்டி வாகனங்களை கவ னமாக இயக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அன்றைய தினத்திலே முன் னோர்களுக்கு திதி, தர்ப்ப–ணம் கொடுத்தால், ஓராண் டிற்கு உள்ள பலன் கிடைக் கும் என்றும், குலதெய்வத்தை வணங்கி வந்தால் எல்லா காரியங்களும் வெற்றியாகும் என்றும் பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கம் அளித்துள்ளார்.

    • ராமேசுவரம் கோவில் சிவராத்திரி விழாவில் கரு. கருப்பையா பட்டிமன்றம் நாளை நடக்கிறது.
    • மகா சிவராத்திரி விழா நாளை(11-ந் தேதி) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது.

    மதுரை

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை(11-ந் தேதி) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கோவை சூலூர் சித்த மருத்துவர் கரு.கரு. கருப்பையாவின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து இரவு 8மணிக்கு ''தமிழர் தந்தை'' சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பிரபல ஜோதிடருமான மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா நடுவர் பொறுப்பில், மானாமதுரை பேராசிரியர் திருமாவளவன், தூத்துக்குடி வக்கீல் சாந்தா பங்கேற்கும் ''நகைச்சுவை பட்டிமன்றம்'' நடக்கிறது.ராமநாதபுரம் வெளிப்பட்டினம் ஆயிரவைசிய முத்தாலம்மன் கோவில் சிவராத்திரி விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியாக சிறப்பு பட்டிமன்ற நடுவர், மடப்புரம் விலக்கு கரு.கருப்பையாவின் ''ஜோதிட சொற்பொழிவு'' 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    ×