search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garu. Karupaiya"

    • ராமேசுவரம் கோவில் சிவராத்திரி விழாவில் கரு. கருப்பையா பட்டிமன்றம் நாளை நடக்கிறது.
    • மகா சிவராத்திரி விழா நாளை(11-ந் தேதி) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது.

    மதுரை

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை(11-ந் தேதி) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கோவை சூலூர் சித்த மருத்துவர் கரு.கரு. கருப்பையாவின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து இரவு 8மணிக்கு ''தமிழர் தந்தை'' சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பிரபல ஜோதிடருமான மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா நடுவர் பொறுப்பில், மானாமதுரை பேராசிரியர் திருமாவளவன், தூத்துக்குடி வக்கீல் சாந்தா பங்கேற்கும் ''நகைச்சுவை பட்டிமன்றம்'' நடக்கிறது.ராமநாதபுரம் வெளிப்பட்டினம் ஆயிரவைசிய முத்தாலம்மன் கோவில் சிவராத்திரி விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியாக சிறப்பு பட்டிமன்ற நடுவர், மடப்புரம் விலக்கு கரு.கருப்பையாவின் ''ஜோதிட சொற்பொழிவு'' 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    ×