search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்றுகுட்டி"

    • விபத்தில் சிக்கிய கன்று குட்டியை மீட்டு சிகிச்சைக்காக தன்னார்வலர்கள் கொண்டு சென்றனர்.
    • சிகிச்சைக்கு அனுப்பிய 2 தன்னார்வலர்களையும் பொதுமக்கள் பாராட்டினர்.

    தஞ்சை ரெட்டிபாளையம் சாலை அப்துல் வகாப் நகரில் நேற்று இரவு கன்றுக்குட்டி ஒன்று படுத்து கிடந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராத விதமாக கன்று குட்டி மீது மோதியது.

    இதில் கன்று குட்டி அந்த வேனில் சிக்கி சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

    வளைவில் அந்த வேன் திரும்பிய போது கன்று குட்டி அதிலிருந்து விலகி சாலையில் பலத்த காயத்துடன் கிடந்தது.

    கன்று குட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை ஆலக்குடியை சேர்ந்த வெற்றிவேல், தஞ்சை மேலவெளியை சேர்ந்த செந்தில் ஆகிய இருவரும் பார்த்து உடனடியாக காரில் அந்த கன்று குட்டியை ஏற்றினர்.

    பின்னர் ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனையில் கன்று குட்டியை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து கன்று குட்டி உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கன்று குட்டியை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய 2 தன்னார்வலர்களையும் பொதுமக்கள் பாராட்டினர். 

    • ஆலங்குடி கே.ராசியமங்கலத்தில் கிணற்றில் விழுந்த கன்றுகுட்டி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது
    • சுமார் 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில் கன்றுக்குட்டி தவறி விழுந்து விட்டது.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலத்தை சேர்ந்த பெரியநாயகி என்பவருக்கு சொந்தமான மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றிருந்தன. மேய்ச்சலின் போது அப்பகுதியில் உள்ள, ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமாக சுமார் 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில், பெரியநாயகிக்கு சொந்தமான கன்றுக்குட்டி தவறி விழுந்து விட்டது. பொதுமக்கள் மீட்க முயற்சி செய்து பலனளிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆலங்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி, கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.

    ×