search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு பொறியாளர்"

    • திட்டம் சாரா பணிகளை சேலம் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • நாட்டமங்கலம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஏழூர் முதல் குருசாமிபாளையம் செல்லும் சாலையின் தரம் மற்றும் கணத்தினை ஆய்வு செய்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் ராசிபுரம் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகளை சேலம் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் ஒரு பகுதியாக நாட்டமங்கலம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஏழூர் முதல் குருசாமிபாளையம் செல்லும் சாலையின் தரம் மற்றும் கணத்தினை ஆய்வு செய்தார். மேலும் ராசிபுரம் நெடுஞ் சாலை உட்கோட்டத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், புறவழிச் சாலை பாலப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். சாலை பரா மரிப்பு பணி களான பாலம் சுத்தம் செய் யும்பணியினை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கி னார். நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் திரு குணா, ராசிபுரம் நெடுஞ் சாலை கட்டுமானம் மற்றும் பரா மரிப்பு உதவி கோட்ட பொறி யாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர் மணிகண் டன்ஆகியோர் கலந்து கொண்டனர். 

    ×