search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடிக்கும் நாய்கள்"

    • பெரியார் நகர் பெருமுலை ரோட்டில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பெருமுலை ரோட்டில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியார் நகரை சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் என பலரை வெறி நாய் கடித்து திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்  எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களைப் பிடிக்க வேண்டும். அப்படிப் பிடித்தால் மட்டுமே குழந்தைகள் பொதுமக்கள் என அனைவரும் நடமாட முடியும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×