search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா விற்பனை"

    • 3 கிலோ போதை பொருள் பறிமுதல்
    • ரோந்து பணியில் சிக்கினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீஸ் ஏட்டு ரங்கநாதன் உள்பட போலீசார் கலவை அடுத்த குப்பிடி சாத்தம் கிராமப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அருகே உள்ள பில்லாந்தி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) என்பவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கலவையை சேர்ந்த அலி (33) என்பவரும் கஞ்சா வைத்திருக்கும் தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கலவையில் அலியிடம் சோதனை செய்தபோது அவரிடம் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் இருவரிடமிருந்தும் மொத்தம் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • பண்ருட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் நேற்று தீவிரகஞ்சா வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, புஷ்பராஜ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் நேற்று தீவிரகஞ்சா வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த ராஜாப்பாளையம் பகுதியில் மளிகைமேடு கிழக்குத் தெருவை சேர்ந்த சந்தோஷ் (வயது 23) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×