search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடுக்கு பூஜை"

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் வீதிஉலா, சமய மாநாடு, யானை மீது களப பவனி, வில்லிசை, கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழா நாட்களில் தினமும் குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் அதிகமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். கோவில் திருவிழாவில் நிறைவு விழா நேற்று நடந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. நேற்று மண்டைகாடு கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் காலையிலிருந்து குடும்பத்துடன் குவிய தொடங்கினார். ஆங்காங்கே உள்ள தென்னந்தோப்புகளில் கூடியிருந்தனர். மண்டைக்காடு கடற்கரை மற்றும் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் பக்தர்கள் வெள்ளமாக தான் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாக காட்சி அளித்தன.

    நேற்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டமும் நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதலும், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு இன்னிசை விருந்தும் 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 10மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்த ருளல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது.

    இதற்காக மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தான் கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த் தங்கள் 9 மண்பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகள் கோவிலுக்கு பவனியாக கொண்டு வந்தனர். அத்துடன் 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது.

    இவற்றை தலையில் சுமந்து வந்த பூசாரிகளின் வாய் பகுதி சிகப்பு துணியால் மூடி கட்டப்பட்டிருந்தது. உணவு பதார்த்தங்கள் வெள்ளை துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன்பு இறக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே குருதி கொடுக்கும் நிகழ்ச்சி யும் நடந்தது.

    அதை தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. தீபாரா தனை நடந்து கொண்டி ருக்கும்போதே கொடி மரத்தில் கொடி இறக்கப்பட்டது. மண்டைக்காடு கோவில் விழாவில் காலையில் இருந்தே அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது. அது போல் கேரளா அரசு போக்குவரத்துக் கழகமும் சிறப்பு பஸ்களை இயக்கியது. திருவனந்தபுரம், தக்கலை, மார்த்தாண்டம், திங்கள்சந்தை போன்ற பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் நடுவூர்க்கரை தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. நாகர்கோவில் பகுதியில் இருந்து வந்த பஸ்கள் புதூர் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.

    மண்டைக்காட்டில் பக்தர்கள் நேற்று அதிகமாக குவிந்திருந்ததால் பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டனர்.

    • மாசி கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • இன்று நள்ளிரவு முக்கிய வழிபாடான ஒடுக்கு பவனியும், பூஜையும் நடக்கிறது.

    மணவாளக்குறிச்சி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் மாசிக் கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.

    நேற்று 9-ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, பகல் 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியர் சமுதாயம் பத்திர காளியம்மன் கோவிலிலிருந்து யானை மீது சந்தன பவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு பைங்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலிலிருந்து சந்தன குடம் மற்றும் காவடி பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு கூட்டுமங்கலம் ஊர் பக்தர்கள் சந்தனகுடம் சார்பில் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில் வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதலும் பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதலும் நடந்தது.

    ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 7.30 மணிவரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 7.30 மணி முதல் மாலை 9 மணிவரை பக்தி பஜனை, 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை சமய மாநாடு, 2 மணிமுதல் 3.30 மணிவரை பக்தி பஜனை, 3.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வில்லிசை, 6 மணிமுதல் இரவு 10 மணி வரை சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதலும், இரவு 10 மணிமுதல் ஆன்மீக அருளிசை நிகழ்ச்சியும் நடந்தது.

    இனறு நள்ளிரவு முக்கிய வழிபாடான ஒடுக்கு பவனியும், பூஜையும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்தவர்களால் தயாரிக்கப்படுகிறது. பின்னர் சன்னதி அருகே உள்ள சாஸ்தான் கோவில் பக்கம் இருந்து ஒடுக்கு பவனி வருகிறது.

    பூஜைக்கு எடுத்துக்கொள்ளப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளை துணிகளால் மூடி ஊர்லமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். பின்னர் கோவிலை ஒரு முறை வலம் வந்து அம்மனின் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும். பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து கும்பளங்காய் மஞ்சள், நீர், சுண்ணாம்பு, பூ ஆகிய பொருட்களால் குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக புறைமேளம் அடிக்கப்படுகிறது. பின்னர் நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடக்கிறது. ஒடுக்கு பவனியின் போதும் பூஜை நடக்கும்போதும் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பூரணமான அமைதி சூழலில் எந்தவித ஓசையும் இன்றி காணப்படும்.

    பின்னர் கொடி இறக்குதலும் நடக்கிறது. இவ்வாறு நடக்கும் பூஜையைக்காண கோவில் வளாகத்திலும் ஒடுக்கு பவனிவரும் வளாகத்திலும் அலை கடலென பக்தர்கள் திரண்டு நிற்பார்கள். இதற்காக மண்டைக்காட்டில் இப்போதே பக்தர் கள் குவியத்தொடங்கி உள்ளனர்.

    • கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.
    • இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோவிலுக்கு கொண்டு வருதல்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்க ளில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.இந்த வருடத்தின் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.

    நேற்று 8-ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நண்பகல் 12.30 மணிக்கு நடுவூர்க்கரை சிவசக்தி திருக்கோவில் பக்தர்கள் மாவிளக்கு பவனி வருதல், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மாவட்ட பக்தர்கள் காலை முதலே மண்டைக்காட்டில் குவிந்தனர். அவர்கள் கோவிலை சுற்றியுள்ள தோப்புகளில் நண்பர்கள், உறவினர்கள் என கூட்டம் கூட்டமாய் பொங்கலிட்டு மற்றும் சமையல் செய்து அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர்.

    பக்தர்களின் வசதிக் காக நாகர்கோவில், களி யக்காவிளை, மார்த் தாண்டம், தக்கலை, குமார கோவில், குலசேகரம் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டன. நேற்று பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கோவில் வளாகம், பொங்கலிடும் பகுதி, கடற்கரை, கடற்கரை சந்திப்பு ஆகிய பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் அருகில் உள்ள குளச்சல், கருங்கல், திங்கள்நகர், மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம் ஆகிய ஊர்களிலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு செம்பொன்விளை சிராயன்விளை பக்தர்களின் சந்தனகுடம் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில்ம வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 8 மணிக்கு பக்தி இன்னிசை சொற்பொழிவு, 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி ஆகியவை நடந்தது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 8 மணிவரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 8 மணி முதல் மாலை 3.30 மணிவரை சொற்பொழிவு போட்டி, 3.30 மணிமுதல் 5 மணிவரை தெய்வீக ஸத்ஸங்க பக்தி இன்னிசை, 5 மணிமுதல் இரவு 7 மணிவரை நாட்டிய நிகழ்ச்சி, 7.30 மணிமுதல் 9 மணிவரை அகில திரட்டு விளக்கவுரை, இரவு 9 மணிமுதல் மாபெரும் அய்யாவழி நிகழ்ச்சி, 10.30 மணிமுதல் பக்தி இன்னிசை சொற்பொழிவு, 10.30 மணிக்கு மேல் புராண நாட்டிய நாடகம் ஆகியவை நடந்தது.

    இன்று இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதலும் நடக்கிறது. விழாவின் பத்தாம் திருவிழாவான நாளை (14-ந் தேதி) அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளலும் 4.30 மணிக்கு அடி யந்திர பூஜையும், 6 மணிக்கு குத்தி யோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதலும் 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோவிலுக்கு கொண்டு வருதலும் இரவு 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை நடக்கிறது.

    ×