search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை ஒடுக்கு பூஜை - பெண் பக்தர்கள் திரண்டனர்
    X

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை ஒடுக்கு பூஜை - பெண் பக்தர்கள் திரண்டனர்

    • கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.
    • இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோவிலுக்கு கொண்டு வருதல்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்க ளில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.இந்த வருடத்தின் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது.

    நேற்று 8-ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நண்பகல் 12.30 மணிக்கு நடுவூர்க்கரை சிவசக்தி திருக்கோவில் பக்தர்கள் மாவிளக்கு பவனி வருதல், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மாவட்ட பக்தர்கள் காலை முதலே மண்டைக்காட்டில் குவிந்தனர். அவர்கள் கோவிலை சுற்றியுள்ள தோப்புகளில் நண்பர்கள், உறவினர்கள் என கூட்டம் கூட்டமாய் பொங்கலிட்டு மற்றும் சமையல் செய்து அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர்.

    பக்தர்களின் வசதிக் காக நாகர்கோவில், களி யக்காவிளை, மார்த் தாண்டம், தக்கலை, குமார கோவில், குலசேகரம் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டன. நேற்று பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கோவில் வளாகம், பொங்கலிடும் பகுதி, கடற்கரை, கடற்கரை சந்திப்பு ஆகிய பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் அருகில் உள்ள குளச்சல், கருங்கல், திங்கள்நகர், மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம் ஆகிய ஊர்களிலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர். மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.15 மணிக்கு செம்பொன்விளை சிராயன்விளை பக்தர்களின் சந்தனகுடம் பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில்ம வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 8 மணிக்கு பக்தி இன்னிசை சொற்பொழிவு, 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி ஆகியவை நடந்தது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 8 மணிவரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 8 மணி முதல் மாலை 3.30 மணிவரை சொற்பொழிவு போட்டி, 3.30 மணிமுதல் 5 மணிவரை தெய்வீக ஸத்ஸங்க பக்தி இன்னிசை, 5 மணிமுதல் இரவு 7 மணிவரை நாட்டிய நிகழ்ச்சி, 7.30 மணிமுதல் 9 மணிவரை அகில திரட்டு விளக்கவுரை, இரவு 9 மணிமுதல் மாபெரும் அய்யாவழி நிகழ்ச்சி, 10.30 மணிமுதல் பக்தி இன்னிசை சொற்பொழிவு, 10.30 மணிக்கு மேல் புராண நாட்டிய நாடகம் ஆகியவை நடந்தது.

    இன்று இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும் பெரிய சக்கர தீவட்டி வீதி உலா வருதலும் நடக்கிறது. விழாவின் பத்தாம் திருவிழாவான நாளை (14-ந் தேதி) அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளலும் 4.30 மணிக்கு அடி யந்திர பூஜையும், 6 மணிக்கு குத்தி யோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதலும் 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோவிலுக்கு கொண்டு வருதலும் இரவு 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை நடக்கிறது.

    Next Story
    ×