search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்வர்யம்"

    • வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமத்துடன், மஞ்சள் கொடுக்க வேண்டும்.
    • சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பதால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து பாக்கியங்கள் பெருகும்.

    மகாலட்சுமியின் அம்சமாகவும் அவளது மனத்திற்கு விருப்பமானதாகவும் உள்ள பொருட்களில் முக்கியமானது மஞ்சள்.

    மகாலட்சுமியின் இருப்பிடமாக மஞ்சளை சொல்வார்கள்.

    மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்யும் போது அட்சதை தூவுவதற்கு முனைமுறியாத பச்சரிசியில் மஞ்சளை தோய்த்து தூவுவார்கள்.

    எந்த பூஜை செய்தாலும் மஞ்சளை அரைத்து பிள்ளையார் போல ஒரு உருவத்தை செய்துவிட்டு,

    அதற்கு குங்குமம் இட்டு பூஜை செய்வார்கள்.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமத்துடன், மஞ்சள் கொடுக்க வேண்டும்.

    சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பதால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து பாக்கியங்கள் பெருகும்.

    நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் பெறலாம்.

    • மகாலட்சுமி அம்மனுக்கு ஐந்து தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
    • மகாலட்சுமி அம்மனுக்கு இனிப்பு மற்றும் உப்பு சமர்ப்பித்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழராஜவீதி யில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்து ள்ளது. இக்கோவி ல் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்ப ட்டது. தஞ்சாவூரில் இத்தல த்தில் மட்டுமே பெருந்தேவி என்கிற மகாலட்சுமி அம்மனு க்கு தனி விமானத்துடன் கூடிய சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு மாதந்தோறும் புனர்பூசம் நட்சத்திரம், உத்திரம் நட்சத்திரம், பஞ்சமி, அஷ்டமி திதி மற்றும் செவ்வாய், வெள்ளி ,ஞாயிறு கிழமை மகாலட்சுமி அம்மனுக்கு ஐந்து தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல ஐஸ்வர்ய ங்களும் கிட்டும் என்பது ஐதீகம். மகாலட்சுமி உப்பில் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே இக்கோவி லில் பக்தர்கள் மகாலட்சுமி அம்மனுக்கு இனிப்பு மற்றும் உப்பு சமர்ப்பித்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவி லில் நேற்று ஐப்பசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு பெருந்தேவி என்கிற மகாலட்சுமி அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தா ர்கள். இந்த வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா ,கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தார்கள்.


    ×