search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ordination"

    • மகாலட்சுமி அம்மனுக்கு ஐந்து தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
    • மகாலட்சுமி அம்மனுக்கு இனிப்பு மற்றும் உப்பு சமர்ப்பித்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழராஜவீதி யில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்து ள்ளது. இக்கோவி ல் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்ப ட்டது. தஞ்சாவூரில் இத்தல த்தில் மட்டுமே பெருந்தேவி என்கிற மகாலட்சுமி அம்மனு க்கு தனி விமானத்துடன் கூடிய சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு மாதந்தோறும் புனர்பூசம் நட்சத்திரம், உத்திரம் நட்சத்திரம், பஞ்சமி, அஷ்டமி திதி மற்றும் செவ்வாய், வெள்ளி ,ஞாயிறு கிழமை மகாலட்சுமி அம்மனுக்கு ஐந்து தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல ஐஸ்வர்ய ங்களும் கிட்டும் என்பது ஐதீகம். மகாலட்சுமி உப்பில் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே இக்கோவி லில் பக்தர்கள் மகாலட்சுமி அம்மனுக்கு இனிப்பு மற்றும் உப்பு சமர்ப்பித்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவி லில் நேற்று ஐப்பசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு பெருந்தேவி என்கிற மகாலட்சுமி அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தா ர்கள். இந்த வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா ,கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தார்கள்.


    • மானாமதுரையில் சித்ராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராஜமாணிக்கம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    மானாமதுரை கொடிக்கால் தெருவில் உள்ள சித்ராயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. 2-ம் கால பூஜை நிறைவடைந்த நிலையில் சித்ராயி அம்மன் மூலவர் விமானக்கலசத்தின் மீதும், பரிவார தெய்வங்களுக்கும் ராஜேஷ் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராஜமாணிக்கம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • அம்மனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள எரவார்பட்டி கிராமத்தில் உள்ள சீலைக்காரி அம்மன், தோட்டி கருப்பச்சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் பிரகாஷ் தலைமையில் 2 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தது. மேளதாளத்துடன் பூசாரிகள் மொக்கமாயன், அழகன் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டன. விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

    • அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபாட்டனர்.

    நாகப்பட்டினம்:

    வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் கோவிலில் நடைபெற்ற 108 குத்துவிளக்கு பூஜை நாகப்பட்டினம் வெளிபாளையத்தில் உள்ள பழமை வாய்ந்த முச்சந்தி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது ஆலயத்தின் ஆண்டு பங்குனி திருவிழா 25ம் தேதி துவங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை கள் நடைபெற்றது தொடர்ந்து ஏராளமான பெண்கள் சுமங்கலிகள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
    • தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் உள்ள கலிதீர்த்த அய்யனார் கோவிலில் 21-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

    3 நாட்கள் நடைபெறும் லட்சார்ச்சனை விழாவின் முதல் நாளில் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்பு சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை நடத்தினர்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு, பக்தர்களுக்கு இலவச பிரசாதப்பை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • செல்முத்துக்குமாரருக்கு 21 வகையான வாசனை திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்.
    • பின்பு, சண்முகார்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.முன்னதாக கிருத்திகை மண்படம் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்முத்துக்குமாரசுவாமிக்கு 21வகையான வாசனை திரவியப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்ப்பபட்டு சண்முகார்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார்.தொடர்ந்து அடிபிரதட்சனம் செய்து தருமபுரம் ஆதீனம் வழிபாடு மேற்கொண்டார்.

    • ஐயாறப்பருக்கு பஞ்சமுக அர்ச்சனையும், அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும் செய்யப்பட்டது.
    • தொடர்ந்து கட்டளை மடத்தில் குருமகா சந்நிதானம் கொலுக்காட்சி.

    திருவையாறு:

    தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயிலுக்கு தருமையாதீனத்தின் 27 -வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மார்கழி தனுர்மாத தரிசனத்திற்காக வருகை புரிந்தார்.

    இதனை முன்னிட்டு ஐயாறப்பர் மற்றும் அறம்வளர்த்த நாயகி அம்மன், நவக்கிரக சந்நிதி, பாலசுப்ர–மணியர், ஆட்கொண்டார், தென் கயிலாயம் அப்பர் சந்நிதி, வடகயிலாயம் ஆகிய சந்நிதிகளின் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனனை செய்யப்பட்டது.

    மாலையில் குருமகா சந்நிதானத்தின் முன்னிலையில் ஐயாறப்பர் சுவாமிக்கு பஞ்சமுக அர்ச்சனையும் அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும் செய்யப்பட்டது.

    முன்னதாக புஷ்ய மண்டபத்துறை வளாகத்தில் நித்ய அன்னதானத் திட்டத்தை குருமகா சந்நி–தானம் ஏழைகளுக்கு திருவமுது படைத்து தொடக்கி வைத்தார்.

    மாலையில் சுவாமி தரிசனத்தை தொடர்ந்து கட்டளை மடத்தில் குருமகா சந்நிதானம் கொலுக்காட்சி அருளி கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

    இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

    • கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது.
    • இந்து முஸ்லிம் கிறிஸ்வர் உள்ளிட்ட மும்மதத்தினர் கலந்து கொண்ட விநாயகர் ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது.

     வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்பலத்தில் அமைந்துள்ள காசிவிஸ்வநாத திருசிற்றம்பல விநாயகர் ஆலயத்தில்மத நல்லிணக்க விநாயக ஊர்வலம் நடைபெற்றது

    முன்னதாக கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது பின்பு இந்து முஸ்லிம் கிறிஸ்வர் உள்ளிட்ட மும்மதத்தினர் கலந்து கொண்ட விநாயகர் ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது

    நிகழ்ச்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிவி ராஜேந்திரன் தலைமை வகித்தார் குருகுல நிர்வாகி வேதரத்தினம் முன்னிலை வகித்தார் விநாயகர் ஊர்வலத்தை புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் நித்திய அஜய்ராஜ்தோப்புத்துறை ஜமாத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான், அப்சல் உசேன், மெய்யாரபிக், தாணிக் கோட்டகம் ஆரோபால்ராஜ் மற்றும் வேதாரண்யம் தொழிலதிபர் விஜயபாலன், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமம் கோவிந்தராஜ், நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜுனன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட ஏராளமான இந்து, முஸ்லிம் கிறிஸ்வர்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

    விநாயகர் ஊர்வலம் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று சம்பலம் ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்டது இதேபோல்வி நாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதியில் 30 இடங்களில் விநாயகர் சிலைகள் மூன்று அடிமுதல் 12 அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கபட்டு உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் பூஜை செய்துவந்தனர் இந்த நிலையில் இன்று புஷ்பவனம், செம்போடை,தோப்புத்துறை வேதாரண்யம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    • முக்கிய வீதிகளின் வழியாக செல்வமகா காளியம்மன் அழைத்து வரப்பட்டது.
    • கிராமமக்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து மாவிளக்கு இட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் கஞ்சிமேடு செல்வமகா காளியம்மன் கோவில் காளி திருநடன திருவிழா நடைபெற்றது. காலையில் செல்வமகா காளியம்மன் படுகளம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முக்கிய வீதிகளின் வழியாக செல்வமகா காளியம்மன் அழைத்து வரப்பட்டது.

    கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து மாவிளக்கு இட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள்கலந்து கொண்டு வழிபட்டனர்.

    ×