search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத நல்லிணக்க விநாயகர் சிலை ஊர்வலம்
    X

    விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

    மத நல்லிணக்க விநாயகர் சிலை ஊர்வலம்

    • கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது.
    • இந்து முஸ்லிம் கிறிஸ்வர் உள்ளிட்ட மும்மதத்தினர் கலந்து கொண்ட விநாயகர் ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்பலத்தில் அமைந்துள்ள காசிவிஸ்வநாத திருசிற்றம்பல விநாயகர் ஆலயத்தில்மத நல்லிணக்க விநாயக ஊர்வலம் நடைபெற்றது

    முன்னதாக கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது பின்பு இந்து முஸ்லிம் கிறிஸ்வர் உள்ளிட்ட மும்மதத்தினர் கலந்து கொண்ட விநாயகர் ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது

    நிகழ்ச்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிவி ராஜேந்திரன் தலைமை வகித்தார் குருகுல நிர்வாகி வேதரத்தினம் முன்னிலை வகித்தார் விநாயகர் ஊர்வலத்தை புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் நித்திய அஜய்ராஜ்தோப்புத்துறை ஜமாத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான், அப்சல் உசேன், மெய்யாரபிக், தாணிக் கோட்டகம் ஆரோபால்ராஜ் மற்றும் வேதாரண்யம் தொழிலதிபர் விஜயபாலன், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமம் கோவிந்தராஜ், நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜுனன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட ஏராளமான இந்து, முஸ்லிம் கிறிஸ்வர்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

    விநாயகர் ஊர்வலம் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று சம்பலம் ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்டது இதேபோல்வி நாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதியில் 30 இடங்களில் விநாயகர் சிலைகள் மூன்று அடிமுதல் 12 அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கபட்டு உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் பூஜை செய்துவந்தனர் இந்த நிலையில் இன்று புஷ்பவனம், செம்போடை,தோப்புத்துறை வேதாரண்யம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    Next Story
    ×